Thursday, May 1, 2008

30-04-08 IPL தமிழ் கிரிக்கெட் - டிராவிட் நம்பிக்கை தொடர்கிறது

30-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், பெங்களுரூ அணியும் மோதின. முதலில் பேட் செய்த அணிடெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் கவுதம் கம்பீர் 65 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களுரூ அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.. எனவே டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய மெக்கிராத் ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பெங்களுருவின் 5 ஆட்டங்களில் நான்காவது தோல்வி ஆகும்.
ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெங்களூரு அணியின் கேப்டன் ராகுல் திராவிட் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அணியினரின் கட்டுக் கோப்பான ஆட்டம் வளர்ந்து வருவதாகவும் இனி வெற்றிகள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


அபாரமாக பேட் செய்த கவுதம் கம்ப்பீர்


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 17 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து மதுரை அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

17 ஆட்டங்களின் முடிவில் ஸ்கோர் விபரம்

6 comments:

said...

// 1 கும்மி XI - இம்சை 1123
.
2 மதுரை பாண்டியர்கள் 1176
//

கணக்கு சரியா வரலையே????

said...

//28-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், பெங்களுரூ அணியும் மோதின. முதலில் பேட் செய்த அணிடெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் கவுதம் கம்பீர் 65 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களுரூ அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.. எனவே சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.//

அதெப்படிங்க? :))

said...

///Udhayakumar said...

// 1 கும்மி XI - இம்சை 1123
.
2 மதுரை பாண்டியர்கள் 1176
//

கணக்கு சரியா வரலையே???? ///
அந்த ஸ்கோர் போர்ட் 28 ந்தேதி வரையிலானது. 30 ந்தேதிக்கான ஸ்கோரில் மதுரையே முன்னிலையில் உள்ளது. வேலைப்பளு காரணமாக அதை இச இயவில்லை.
30/04/08 ஸ்கோர் நிலவரம்
1.கும்மி XI - இம்சை 1331
2.மதுரை பாண்டியர்கள் 1402
3.சென்னை பாய்ஸ் 1278
4. கோவை கொங்கு சிங்கங்கள் 1017
5.சேலம் சிறுத்தைகள் 1144
6.நெல்லைச்சீமையினர் 1542
7.திருச்சி - மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் 1210

said...

///இலவசக்கொத்தனார் said...

//28-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், பெங்களுரூ அணியும் மோதின. முதலில் பேட் செய்த அணிடெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் கவுதம் கம்பீர் 65 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய பெங்களுரூ அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.. எனவே சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.//

அதெப்படிங்க? :)) //
கொத்ஸ் ஐயா! காப்பி, பேஸ்ட்டில் ஏற்பட்ட குழப்பம்.
இப்படியாவது பதிவுக்கு கமெண்ட் வருதே ;)

said...

முப்பதாம் தேதி தானே இந்த போட்டி நடந்தது. 28.04.2008ன்னு போட்டிருக்கே!
ஒரே குழப்பம்.

said...

///மஞ்சூர் ராசா said...

முப்பதாம் தேதி தானே இந்த போட்டி நடந்தது. 28.04.2008ன்னு போட்டிருக்கே!
ஒரே குழப்பம். ///
இன்றைக்கு இவ்வளவு தவறா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்