Sunday, November 2, 2008

முக்கிய செய்தி : ஓய்வை அறிவித்தார் கும்ப்ளே!


இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனும், சுழல்பந்துவீச்சாளருமான அனில் கும்ப்ளே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய கும்ப்ளே
இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

இந்தியாவுக்காக 18 வருடங்கள் ஆடியுள்ள கும்ப்ளே 131 டெஸ்ட்
போட்டிகளில் ஆடி 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 271 ஆட்டங்களில் ஆடி 337 விக்கெட்களை விழ்த்தியுள்ளார். டெஸ்ட்டில் 2461 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 938 ரன்களும் எடுத்துள்ளார்.

பாகிஸ்தானுடனான ஒரு ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய சாதனையையும் கும்ப்ளே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சாதனைகள் பல படைத்து விடை பெறும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துக்கள்!

முக்கிய செய்தி : ஓய்வை அறிவித்தார் கும்ப்ளே!

இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனும், சுழல்பந்துவீச்சாளருமான அனில் கும்ப்ளே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய கும்ப்ளே
இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

இந்தியாவுக்காக 18 வருடங்கள் ஆடியுள்ள கும்ப்ளே டெஸ்ட்
போட்டிகளில் 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுடனான ஒரு ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய சாதனையையும் கும்ப்ளே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சாதனைகள் பல படைத்து விடை பெறும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துக்கள்!

Friday, October 17, 2008

டெஸ்ட்டில் அதிக ரன் - சச்சின் புதிய உலக சாதனை



இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் சாதனை நாயகன் சச்சின். சச்சின் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இது வரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் லாரா, 11,953 ரன்கள் எடுத்து தக்க வைத்திருந்தார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தற்போது அந்த சாதனையை முறிய‌டித்துள்ளார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில், 12,000 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


முன்னதாக சச்சின் சாதனை படைப்பதற்காக லாரா பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லாரா அளித்திருந்த பேட்டியில், சச்சின், இந்தியாவை இக்கட்டான கால கட்டங்களில் காப்பாற்றியிருக்கிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.

சச்சின் சாதனை புரிந்ததை தொடர்ந்து மொகாலி விளையாட்டரங்கே களை கட்டியது. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சக வீரர்கள், சச்சினுக்கு பெவிலியனில் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். ஆஸி., வீரர்கள் முன்னதாக சச்சினை சாதனை படைக்க விடாமல் தடுப்பதே தங்கள் இலக்கு என்று கூறியிருந்தனர். அவர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்தது.

லாரா 131வது ‌டெஸ்ட் போட்டியில் நிகழ்த்திய சாதனையை, சச்சின் தனது 152வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.


டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து முதல் ஏழு இடங்களை பிடித்த வீரர்கள் :

சச்சின் 152 போட்டிகளில் 12000 என்ற இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் ‌போட்டிகளில் 39 சதமும், 50 அரைசதமும் அடித்துள்ளார். வெ. இண்டீஸ் அணியின் லாரா 11953 ரன்கள் அடித்தார். 34 சதமும், 48 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பார்டர், 156 போட்டிகளில் விளையாடி, 11174 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதமும் 63 அரைசதமும் அடித்துள்ளார். அஸி., வீரர் ஸ்டீவ் வாக் 168 போட்டிகளில் விளையாடி, 10927 ரன்கள் எடுத்துள்ளார், 32 சதமும் 50 அரைசதமும் அடித்துள்ளார். டிராவிட், 127 போட்டிகளில் விளையாடி 10341 ரன்கள் எடுத்துள்ளார், 25 சதமும் 53 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பாண்டிங் , 121 போட்டிகளில் விளையாடி, 10239 ரன்கள் எடுத்துள்ளார், 36 சதமும் 40 அரைசதமும் அடித்துள்ளார். கவாஸ்கர் 125 போட்டிகளில் விளையாடி, 10122 ரன்கள் எடுத்துள்ளார். 34 சதமும் 45 அரைசதமும் அடித்துள்ளார்.

நன்றி : தினமலர்

கும்ப்ளே இல்லை - இந்தியா பேட்டிங் - சாதிப்பாரா சச்சின் - 2வது டெஸ்ட் ஆரம்பம்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் அமீத் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் துவங்கு கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைக்க காத்திருக் கிறார் சச்சின். கேப்டன் கும்ளே காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயம். பெங்களூரு போட்டி "டிரா' ஆனதையடுத்து இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் இன்று பஞ்சாபிலுள்ள மொகாலியில் துவங்குகிறது.

கடந்த சில நாட்களாக இங்கு நல்ல மழை பெய்து வந்ததையடுத்து போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், நேற்று முதல் இங்கு நல்ல வெயில் அடித்து வருவதால் போட்டி முழுமையாக நடக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.சமீபகாலமாக இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே சர்ச்சைகள் தான் நினைவுக்கு வரும். முதல் டெஸ்டில் கும்ளே-பாண்டிங், ஜாகிர்-ஹாடின் உள்ளிட்ட வீரர்கள் முறைத்து கொண்டாலும், பிரச்னை பெரிதாகவில்லை.

விளாசுவாரா சேவக்?:பெங்களூருவில் சேவக்-காம்பிர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மொகாலியில் இவர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை ஒருகை பார்த்தால் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தலாம்.

சாதனை உறுதி: லாராவின் சாதனையை நெருங்கிவிட்ட சச்சின், அதற்கு தேவையான 15 ரன்களை மொகாலியில் நிச்சயம் எட்டுவார் என எதிர்பார்க்கலாம். டிராவிட், கங்குலி, லட்சுமண் உள்ளிட்ட சீனியர்கள் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். நெருக்கடியில் இருக்கும் இவர்கள் மொகாலியில் சதம் கடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. பெங்களூருவில் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்திய ஹர்பஜன், ஜாகிர், மொகாலியிலும் கலக்கலாம்.

ஜாகிர் மிரட்டல்: பந்துவீச்சை பொறுத்தவரை இஷாந்த், ஜாகிர் கூட்டணி மிரட்டி வருகிறது. மற்ற இந்திய ஆடுகளங்களை விட மொகாலி வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் மூன்றாவது வேகமாக முனாப் படேல் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது.

கும்ளே பரிதாபம்: சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் மட்டுமே ஓரளவு சிறப்பாக செயல் பட்டார். ஆனால், கேப்டன் கும்ளே கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்சிலும் சேர்த்து ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியாமல் தவிப்பது பலவீனம்.

பாண்டிங் பலம்: ஆஸ்திரேலிய அணியின் அதிக எதிர்பார்ப்பாக இருந்த மாத்யூ ஹைடன் முதல் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார். இவருடன் துவக்க வீரராக வந்த காடிச் சிறப்பாக விளையாடினார். கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி பெங்களூருவில் சதம் கடந்து அணிக்கு வலுவான ஸ்கோர் பெற்று தந்தனர். இவர்கள் இருவரையும் விரைவில் வெளியேற்றாவிட்டால் சிக்கல் தான். எதிர்கால கேப்டனாக கருதப்படும் மைக்கேல் கிளார்க் பார்மின்றி தவிப்பது பின்னடைவு.

சிடில் அறிமுகம்:பந்துவீச்சில் பிரட் லீ அசத்தினாலும், முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் தலா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சண்டிகர் லயன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவமும் இவருக்கு கைகொடுக்கலாம். ஸ்டூவர்ட் கிளார்க் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பீட்டர் சிடில் அறிமுகமாகிறார்.மொகாலியில் வெற்றி கணக்கை துவக்கி தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இந்திய வீரர்கள் முழு திறமையையும் பயன்படுத்தினால் ஆஸ்திரேலியாவை எளிதாக சமாளிக்கலாம்.

இன்னொரு சாதனை: டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் (11,953) சாதனையை முறியடிக்க இந்தியாவின் சச்சினுக்கு (11,939) இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. டெஸ்ட்(39) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்(42) அதிக சதம் கடந்த வீரர், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்(16,361) எடுத்தவரான சச்சின் இன்று 4வது சாதனைக்கு தயாராக இருக்கிறார்.



முதல் முறை: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மொகாலியில், டெஸ்ட் போட்டி ஒன்றில் மோதுவது இதுவே முதல் முறை. இங்கு இந்திய அணி 7 டெஸ்டில் பங்கேற்று 2 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. நான்கு டெஸ்ட் "டிரா'வில் முடிந்துள்ளது.

ஆடுகளம் எப்படி?: வழக்கமான இந்திய ஆடுகளங்களில் இருந்து மொகாலி மைதானம் சற்று வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் துவக்கத்தில் வேகங்களுக்கு சாதகமாக இருக்கும். பின்னர் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக மாறிவிடும். இதனால் முதல் 10 ஓவர்களில் கவனமாக விளையாடினால், மிகப் பெரிய ஸ்கோரை எட்டலாம்.

மழை வாய்ப்பு?: மொகாலியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. ஆனாலும் இன்று வானிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என தெரிகிறது. வெயில் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. மாலையில் மேகமூட்டம் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசும் இருக்கும். மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

கும்ளே சந்தேகம்: தோள்பட்டை காயம் முழுமையாக குணமடையாத நிலையில் கும்ளே இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,"" தோள்பட்டை காயம் நன்றாக குணமடைந்து வருகிறது. இரண்டாவது டெஸ்டில் விளையாடுவேனா... இல்லையா... என்பது கடைசி நேரத்தில் தான் தெரியும். மொகாலி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் கைகொடுக்கும் என நம்பலாம். ஆஸ்திரேலிய அணியில் வார்ன் இல்லாதது பின்னடைவு,'' என்றார்.


செய்தி : தினமலர்

Thursday, October 16, 2008

கும்ப்ளேவுக்கு நெருக்கடி முற்றுகின்றது! பாண்டிங், வெங்கச்கர் தாக்கு!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரூவில் நடந்தது. இந்த ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் ஜொலிக்காத போதும் கடைசி நிலை வீரர்கள் கண்ணியமான ஸ்கோரை எட்ட உதவினார்.அதே நேரத்தில் பெளலிங் பிரிவில் இரண்டு அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அணியின் கேப்டனும், சுழப்பந்து வீச்சாளருமான கும்ப்ளே இந்த டெஸ்ட்டில் 51 ஓவர்கள் பந்து வீசியும் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற இயலாமல் வெறும் கையுடன் திரும்பினார். இரண்டாம் இன்னிங்ஸில் தோல்பட்டை வலி காரணாமாக 8 ஓவர் மட்டுமே வீச முடிந்தது.



இந்நிலையில் திலிப் வெங்கச்கர் கும்ப்ளே டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்பே தனது உடல் தகுதி சரியில்லையெனக் கூறி ஆட்டத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மீடியாக்களும் 59 ஓவர் வீசி ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற இயலாததைக் குறை கூறியுள்ளன. ஆஸி கேப்டன் பாண்டிங்கும் கும்ப்ளேவின் பந்து வீச்சி சிறப்பானதாக இல்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இது போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கும்ப்ளே பெங்களூரு டெஸ்ட்டில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லையென்றும், 600 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய பிட்சில் ஆசியை 430 ரன்களுக்குள் சுருட்டியதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் தொடர் நட்ந்து கொண்டி இருக்கும் சூழலில் இது போன்றவைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

- கிரிக்கெட் ரசிகன்

Friday, October 10, 2008

ஓய்வு ஏன்? முடியை மாற்றுபவனுக்கு இடமாம் எனக்கில்லையாம் - கங்குலி ஆவேசம்

""தேர்வு குழுவினர் என்னை மோசமாக நடத்தினர். இனிமேலும் என்னை பலிகடா ஆக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் ஓய்வை அறிவித்தேன்,'' என்கிறார் கங்குலி. இந்திய அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்தவர் கங்குலி. இவர் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டின் நிர்ப்பந்தம் தான் காரணம் என கூறப்படுகிறது.

நெருக்கடி கொடுத்தனர்: இந்நிலையில் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வு குழுவினர் தன்னை பலிகடா ஆக்கிவிட்டதாக கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: தேர்வாளர்களின் கருணையில் விளையாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு தொடருக்கு வாய்ப்பு தருவார்கள். ஆனால், அடுத்த தொடரிலிருந்து நீக்கிவிடுவார்கள். எப்போதும் என்னை தான் "பலிகடா' ஆக்குகிறார்கள். இது நீடிக்க வேண் டாம் என்ற எண்ணத்துடன் ஓய்வு பெற முடிவு செய் தேன். உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தால், அதை எவ்வளவு நேரம் தான் பொறுத்து கொள்வீர்கள். 450 போட்டிகள் விளையாடிய பின்பும் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.



தூக்கம் வரவில்லை:

இரானி கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கப்படுவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. சொல்ல முடியாத வேதனை காரணமாக ஒரு மாதம் எனக்கு தூக்கம் வரவில்லை. புதிய தேர்வு குழுவினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பொறுப்பேற்றிருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். சிலர் தாங்கள் சேர்த்த ரன்களை விட அதிக முறை "ஹேர் ஸ்டைலை' மாற்றியுள்ளனர். இவர்களுக்கு அணியில் தொடர்ந்து இடம் அளிக் கப்படுகிறது. சிறப்பாக விளையாடிய போதும் என்னை நீக்கிவிட்டார்கள். எனக்குரிய மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

செய்தி : தினமலர்

Thursday, October 9, 2008

நியூஸிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்

பங்களாதேஷில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இன்று மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி நியூஸிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.



முதலில் பேட் செய்த நியூ அணி 50 ஓவரில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஓரம் 57 ரன்களும், வெட்டோரி 30 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷின் முர்தாசா 4 விக்கெட்களையும், ரசாக் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 45.3 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பங்களாதேஷின் ஜூனைத் சித்திக் 85 ரன்களும், அஷ்ரபுல் 50* ரன்களும் எடுத்தனர்.



2007 உலகக் கோப்பைக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை பங்களாதேஷ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் முதன் முறையாக மூன்றாம் பவர் பிளேயை பேட்டிங் அணியே தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. இதில் நியூசிலாந்து அணி 34 முதல் 38 வரை எடுத்து வந்தது. அதில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் அணி 39 வது ஓவர் முதல் பவர் பிளேயை பயன்படுத்தியது.

இந்திய ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் - இன்று ஆரம்பம்


கங்குலி ஓய்வு அறிவித் துள்ள பரபரப்பான சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் ஆரம்பமாகிறது. இந்தியா வெற்றியுடன் துவக்குமா? சச்சின் உலக சாதனை படைப் பாரா? பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி எழுச்சி காணுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் அணி, தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் இன்று பெங்களூருவில் துவங்குகிறது. கும்ளே தலைமையிலான இந்திய அணி இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது. சீனியர் வீரர்கள் கட்டாயம் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளனர். கங்குலியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சச்சின், டிராவிட், லட்சுமண் மனதளவில் சோர்ந்து போயுள்ளனர். தேர்வுக்குழுவின் பார்வை லட்சுமண் மீது அதிகம் உள்ளது. இதனை உணர்ந்து பழைய லட்சுமணாக பிரகாசிக்க வேண்டும். 2001ல் கோல்கட்டா டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்களை குவித்தது போல், இம்முறையும் அசத்த வேண்டும்.


சச்சின் சவால் : டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற லாராவின் சாதனையை தகர்க்க சச்சினுக்கு 77 ரன்கள் தான் தேவைப்படுகிறது. சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் சாதிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். "சாதனைக்கு தேவையான ரன்களை அவ்வளவு எளிதில் எடுக்க விட மாட்டோம்' என பாண்டிங் வேறு சவால் விடுத் துள்ளார். எனவே, மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டும். சச்சின்-பிரட் லீ மோதல் விறுவிறுப்பை ஏற்படுத்தலாம்.

டிராவிட்டை பொறுத்தவரை "இந்திய பெருஞ்சுவர்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். சேவக் இன்னொரு முறை 300 ரன்களுக்கு முயற்சிக்கலாம். அடுத்த தலைமுறை கேப்டன் என்பதை தோனி, இப்போட்டியின் மூலம் அழுத்தமாக உணர்த்துவார் என எதிர்பார்க்கலாம்.

கடைசி போட்டி: தான் பிறந்த பெங்களூரு மண்ணில் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ள கும்ளே, வழக்கம் போல் சுழலில் மிரட்டலாம். இவருக்கு பக்கபலமாக ஹர்பஜன் இருப்பதால் கவலையில்லை. வேகத்தில் ஜாகிர் கான், ஆர்.பி.சிங்கின் அனுபவம் கைகொடுக்கும்.



சாப்பல் கணிப்பு: வழக்கமாக ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்கள் தான் அதிகம் இடம் பெற்று இருப்பர். தற்போதைய அணி கொஞ்சம் இளமையாக உள்ளது. இந்திய அணியை பற்றி நன்கு அறிந்த கிரெக் சாப்பல், துணை பயிற்சியாளராக இருப்பது கூடுதல் "பிளஸ்'. பெங்களூரு ஆடுகளம் முதலிரண்டு நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும். பின்னர் ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக அமையும் என சாப்பல் கணித்துள்ளார். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் பாண்டிங், ஹைடனை தான் பெரிதும் சார்ந்துள்ளது. ஹர்பஜன் சுழலில் பாண்டிங் தப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வயிற்று வலியால் அவதிப்பட்ட மைக்கேல் கிளார்க் இன்று பங்கேற்பார் என அறிவிக் கப்பட்டுள்ளது.

ஆல்-ரவுண்டர்' சைமண்ட்ஸ் இல்லாதது அணிக்கு பெருத்த "அடி'. வேகப்புயல் பிரட்லீ மட்டுமே மிரட்டக்கூடியவராக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இவரை இந்திய வீரர்கள் சமாளித்து விட்டால், டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

கிடைக்குமா முதல் வெற்றி?: இன்றைய போட்டி நடக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 3 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இரண்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி "டிரா'வில் முடிந்தது.

இங்கு இந்திய அணி 17 டெஸ்ட் போட்டி களில் பங்கேற்று 4 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்துள்ளது. 7 போட்டிகள் "டிரா'வில் முடிந்துள்ளன. இங்கு நடந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இம்முறை கும்ளே தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அசத்தும் என எதிர்பார்க்கலாம்.

கும்ளே "சுழல் ஜாலம்': இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாத னையை கேப்டன் கும்ளே படைத்துள் ளார். சொந்த மண்ணான பெங்களூரு வில் இவர் இதுவரை 8 டெஸ்டில் பங்கேற்று 41 விக்கெட் கைப் பற்றியுள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் கபில் (27), ஹர்பஜன் (21) இருக்கின்றனர்.

நால்வர் கூட்டணிக்கு நெருக்கடி: பாண்டிங்: கங்குலி, டிராவிட், லட்சுமண், சச்சின் அடங்கிய நால்வர் கூட்டணி ஓய்வு நெருக்கடியில் இருப்பது, தங்களுக்கு சாதகமாக அமையும் என ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், ""இந்திய அணியின் சீனியர் வீரர் களுக்கு இது தான் கடைசி டெஸ்ட் தொடர் எனறு மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. கங்குலியை தொடர்ந்து சச்சின் கூட ஓய்வு அறிவிக் கலாம். ஓய்வு பற்றிய செய்திகள் நால்வர் கூட்டணிக்கு பல்வேறு விதத்தில் நெருக்கடி ஏற்படுத்தும். கங்குலி, டிராவிட் பீல்டிங்கில் தடுமாறு கின்றனர். இதனை பயன்படுத்தி பார்டர்- கவாஸ்கர் கோப்பையை வெல்வோம்,'' என்றார்.



சச்சின் 2வது இடம்: பெங்களூருவில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் பெற்றுள் ளார். இவர் 8 டெஸ்டில் பங்கேற்று 2 சதம், 3 அரைசதம் உட்பட 600 ரன்கள் எடுத்து உள்ளார். 2வது இடத்தை சச்சினும் (6 டெஸ்டில், 496 ரன்கள்), 3வது இடத்தை குண்டப்பா விஸ்வநாத்தும் (450 ரன்கள்) பிடித்துள்ளனர்.

மழை வரலாம்: முதல் டெஸ்ட் நடக்கும் பெங்களூருவில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு 60 சதவீதம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்ப நிலை அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்சியசும் இருக்கும் என தெரிகிறது.

ஆடுகளம் எப்படி?: வழக்கமான இந்திய ஆடுகளங் களை போல் பெங்களூரு மைதானமும் பேட்டிங் சொர்க்கபுரியாக இருக்கும். துவக்கத்தில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம். கடைசி இரண்டு நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும். தற்போது வானிலை மந்தமாக இருப்பதால் முதலிரண்டு நாட்களில் வேகங்களும் அசத்த வாய்ப்புள்ளது.

செய்தி : தினமலர்

Saturday, October 4, 2008

பச்சாக்களிடம் பாலோ ஆனைத் தவிர்க்க போராடிய ‘ஜாம்பவான்’ ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய போர்டு பிரசிடெண்ட் அணியுடன் நான்கு நாள் போட்டியில் மோதி வருகிறது. அக்டோபர் 2 ந்தேதி ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய கிரிக்கெட் வாரிய அணி 455 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா, மற்றும் விராத் கோகில் இருவரும் சதமடித்தனர். பர்த்தீவ் பட்டேல், இர்பான் பதான் இருவரும் அரை சதமடித்தனர்.

இதனை அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்ததன. ஹெய்டன் 20, கட்டிச் 15, பாண்டிங் 41, கிளார்க் 18, ஹட்டின் 34, கிரசியா 0, லீ 0 என தள்ளாடியது. 255 ரன்கள் எடுத்தால் பாலோ ஆனைத் தவிர்க்கலாம் என்ற நிலையில் 218 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து பரிதாபமாகக் காட்சி அளித்தது.

ஆனாலும் ஹஸ்ஸியும், பந்து வீச்சாளர் கிளார்க்கும் இணைந்து ஆஸ்திரேலியாவை அவமானத்தில் இருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர்.




இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. இதையும் சேர்த்து இந்திய அணிக்கு 229 ரன்கள் முன்னிலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 1, 2008

இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு : கங்குலி, லக்ஷ்மண், திராவிட்க்கு இடம்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி, இன்று மும்பையில் தேர்வு செய்யப்பட்டது. அணியில் சீனியர் வீரர் கங்குலி இடம் பெறுவது சந்தேகமாக இருந்தது.

இந்நிலையில் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 9 ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவராக ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

அணி வீரர்கள்:
அனில் கும்ளே, வீரேந்திர ஷேவாக்; ராகுல் டிராவிட் ; கவுதம் காம்பிர், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லக்ஷமன், தோனி, ஹர்பஜன்சிங், ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆர்.பி.சிங், பத்ரிநாத் மற்றும் அமித் மிஸ்ரா.

செய்தி : தினமலர்

Tuesday, September 23, 2008

ஜனவரி 2009 ல் இந்திய கிரிக்கெட் அணி பாக் செல்கின்றது

இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் ஆட்டம் மற்றும் ஒரு 20-20 ஆட்டங்களில் ஆடுவதற்காக இந்திய அணி வரும் 2009 ஜனவரியில் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்கின்றது.

சமீப காலங்களில் பாகிஸ்தானில் வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில அணிகள் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்து விட்டன.

இந்நிலையில் இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்ட விபரம்

Friday, September 12, 2008

2008 ICC விருதுகள் - கடும் சர்ச்சையைக் கிளப்புகின்றது

சமீபத்தில் நடந்த ICC யின் விருதுகள் வழங்கும் விழாவில் தோனி, யுவராஜ், சந்தர்பால் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விருதுகள் அனைத்தும் ஆகஸ்ட் 9 2007 முதல் ஆகஸ்ட் 12 2008 வரையிலான கால அள்வில் நடைபெற்ற ஆட்டங்களை மையமாக வைத்து வழங்கப்பட்டுள்ளன.


சர்ச்சை 1 - ஒருநாள் பட்டியல்
ஒருநாள் ஆட்டக்காரர்கள் பட்டியலில் தோனிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தோனி 39 ஆட்டங்களில் 49.92 ரன் விகிதத்தில் 1298 ரன்களும், 46 கேட்ச்களும், 16 ஸ்டம்பிங்களும் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து சச்சின் (29 ஆட்டங்களில் 46.78 விகிதத்தில் 1310 ரன்களும்) இருந்தார். இந்நிலையில் ஒருநாள் வீரர்களுக்கான பட்டியலில் சச்சின், தோனி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் 27 ஆட்டங்களில் 68.29 ரன்கள் விகிதத்தில் 1161 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்த பாகிஸ்தானின் முகமது யூஸூப் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. 15 ஆட்டங்களில் 45 சராசரியுடன் 675 ரன்கள் மட்டுமே எடுத்த ஹர்சல் கிப்ஸ், 21 ஆட்டங்களில் 42 சராசரியுடன் 718 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங், 24 ஆட்டங்களில் 49 சராசரியுடன் 1099 ரன்கள் எடுத்துள்ள யூனுஸ் கான், 23 ஆட்டங்களில் 45 சராசரியுடன் 780 ரன்கள் எடுத்துள்ள சைமண்ட்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். யூசூபின் ஸ்ட்ரைக் ரேட்டும் 83 சதவீதம் என்று நன்றாகவே இருக்கும் நிலையில் அவரது பெயர் இந்த பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.



அதே போல் இலங்கையின் பர்வேஷ் மகரூப்பும் ஒருநாள் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் அந்த கால கட்டத்தில் வெறும் 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 14 விக்கெட்களை 17.42 சராசரியில் பெற்றுள்ளார். இவரது பேட்டிங்கும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. வெறும் 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இலங்கையில் மெண்டீஸ் 20 விக்கெட்களை 8 ஆட்டங்களில் 10.25 சராசரியில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை 2 - டெஸ்ட் பட்டியல்

கடந்த ஓராண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விக்கெட் கீப்பராக பணி செய்த சங்கக்காராவின் பெயர் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் இடம் பெற்றுள்ளது.

அதே போல் டெஸ்ட் பேட்ஸ்மேன் பட்டியலில் இடம் பெற்றுள்ள கெவின் பீட்டர்சன் கடந்த ஓராண்டில் 47.25 ரன் விகிதத்திலேயே ரன்களை எடுத்துள்ளார். ஆனால் டி வில்லியர்ஸ், கிளார்க், சைமண்ட்ஸ் ஆகியோர் 55 ரன் விகிதங்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Thursday, September 11, 2008

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா மறுப்பால் ICC குழப்பம்

கராச்சி: சாம்பியன் டிராபி தொடரை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் நடத்த, இந்தியா மற்றும் இதர நாடுகள் சம்மத்திக்கவில்லை என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி சவ்கத் நக்மி தெரிவித்தார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் செப்டம்பர் 12 ல் நடைபெறுவதாக இருந்தது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் பங்கேற்க மறுத்தனர். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை தவிர, இதர ஐரோப்பிய நாடுகள் இந்த போட்டியை வேறு நாட்டில் ஒத்தி வைக்க ஆலோசனை கூறின. தென் ஆப்ரிக்கா, இலங்கை போன்ற நாடுகள் தொடரை நடத்த தயார் என்று அறிவித்தன. ஐ.சி.சி தொடரை அடுத்த ஆண்டு தள்ளி வைத்து, தற்காலிகமாக தப்பித்துக் கொண்டது. துபாயில் நடைபெற்ற இரண்டு நாள் ஐ.சி.சி கூட்டத்தில், எதிர்கால கிரிக்கெட் அட்டவனை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து சவ்கத் நக்மி கூறியது:ஐ.சி.சி நிர்வாகம் சாம்பியன் டிராபி தொடரை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொடரை 13 மாதங்களுக்கு மேல் தள்ளிப்போட முடியாது. இதனால் இந்த தொடரை அக்டோபர் மாதம் நடத்தவேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வந்தது. ஐ.சி.சி கிரிக்கெட் அட்டவனையில் திட்டமிட்டபடி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு அக்டோபர் நடுவில், ஆஸ்திரேலிய அணியோடு ஏழு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தும் திட்டம் உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் போட்டியும், சாம்பியன்ஸ் டிராபியும், ஒரே நேரத்தில் நடக்கும் சூழ்நிலையில் உள்ளது. பி.சி.சி.ஐ நிர்வாகத்தோடு எங்களுக்கு கறுத்து வேறுபாடு எதுவும் இல்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரை அக்டோபர் இரண்டாவது வாரம் நடத்துவது குறித்து, ஐ.சி.சி கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு சவ்கத் நக்மி கூறினார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

ICC கிரிக்கெட் விருதுகள் 2007- தோனி, யுவராஜ் சிங்குக்கு

ஐ.சி.சி., சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரர் விருதை இந்திய கேப்டன் தோனி தட்டிச் சென்றார். "டுவென்டி-20' பிரிவில் சிறந்த வீரர் விருதை யுவராஜ் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், இஷாந்த் சர்மாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்(ஐ.சி.சி.,), ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது. இவ்விருதுக்கு கடந்த 2007, ஆக., 9ம் தேதி முதல் 2008, ஆக. 12ம் தேதி வரையிலான வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை கிளைவ் லாயிட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது.

கிரிக்கெட் ஆஸ்கார் : கிரிக்கெட் உலகின் "ஆஸ்கார்' என போற்றப்படும் இவ்விருதுக்கு இந்திய கேப்டன் தோனியின் பெயர் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' என இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய் யப்பட்டு இருந்தது. ஒரு நாள் அரங்கில் சச்சின் பெயரும் இடம் பெற்று இருந்ததால் கடும் போட்டி காணப்பட்டது.

சச்சினை முந்தினார்: இந்தச் சூழலில் நேற்று இரவு ஐ.சி.சி., விருது வழங்கும் விழா துபாயில் வண்ணமயமாக நடந்தது. இதில் ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தோனி கைப்பற்றினார். ஒரு நாள் போட்டி ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இவர், விருதுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 39 ஒரு நாள் போட்டிகளில் 1, 298 ரன்கள் எடுத்துள்ளார். கீப்பராக 62 விக்கெட் வீழ்ச்சிக்கு(46 கேட்ச், 16 ஸ்டம்பிங்) காரணமாக இருந்துள்ளார். இதன் அடிப்படையில் விருதை கைப்பற்றினார். ஒரு நாள் அரங்கில் மிகவும்

சிக்சர் மன்னன்:"டுவென்டி-20' பிரிவில் யுவராஜ் சிங் சாதித்தார். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர்கள் விளாசிய இவர், சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை கைப்பற்றினார்.

சூப்பர் மெண்டிஸ்: வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை இலங்கையின் சுழல் நாயகன் மெண்டிஸ் பெற்றார். இப்பிரிவில் இடம் பெற்று இருந்த இந்தியாவின் இளம் இஷாந்த் சர்மா வாய்ப்பை இழந்தார்.

சந்தர்பால் அபாரம்:ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன் பெற்றார். கிரிக்கெட் உணர்வை சிறப் பாக வெளிப்படுத்தியதற்கான விருதை இலங்கை அணி தொடர்ந்து இரண்டாம் முறையாக பெற்றது. சிறந்த அம்பயருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் சைமன் டாபெல் தொடர்ந்து 5வது முறையாக வென்றார்.

டெஸ்டில் சேவக்: ஐ.சி.சி., ஒரு நாள் போட்டிக்கான 12 பேர் அடங்கிய உலக லெவன் அணியில் சச்சின், தோனி இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் அணிக்கான 12 பேரில் இந்தியா சார்பில் சேவக் மட்டும் இடம் பெற்றுள்ளார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Tuesday, September 2, 2008

ஆஸி வீரர் சைமண்ட்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?

மெல்போர்ன் : வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது. முன்னதாக 2005ல் மது அருந்திவிட்டு போட்டியில் விளையாட வந்த காரணத் துக்காக இவர் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார். அதன்பின்னர்


இந்தாண்டு துவக்கத்தில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, ஹர்பஜன் தன்னை"குரங்கு' என கேலி செய்ததாக தவறான புகார் அளித்து, சர்ச்சையில் சிக்கினார்.முதல் முறை அல்ல:தற்போது வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2002ல் இவர் பிரிஸ்பேன் ரக்பி அணியின் பயிற்சியாளரிடம் தன்னை ரக்பி வீரராக மாற்றும்படி கேட்டுக்கொண்டார். அப்போதும் கிரிக்கெட் அணியிலிருந்து விலகும் எண்ணத்தில் இருந்தார். அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இவரது முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அளிக்கும் ரூ. 2 கோடி ஒப்பந்த தொகை கிடைக்காமல் போய்விடும். ஆனால், கடந்தாண்டு ஐ.பி.எல்., தொடரில் ரூ. 5.4 கோடி பெற்ற இவர் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கலாம்.


ஆதரவுக்கு நன்றி: இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு சைமண்ட்ஸ்பேட்டியளித்த போது,""எனக்கு எது முக்கியம் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு என்னிடம் விட்டுவிட்டது. விரைவில்சரியான முடிவை எடுக்கவிருக்கிறேன்,'' என்றார்.சைமண்ட்ஸ் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,""சைமண்ட்ஸ் இல்லாத ஆஸ்திரேலிய அணி முழு நிறைவுபெறாது. ஆனால், அவர் எப்போது விளையாட வருவார் என தெரியவில்லை,'' என்றார். இவரை தொடர்ந்து காயம் காரணமாக வங்கதேசதொடரில் பங்கேற்காத ரிக்கி பாண்டிங் மற்றும் பயிற்சியாளர் டிம் நீல்சன் ஆகியோரும் சைமண்ட்ஸ் மீதுஅதிருப்தியடைந்துள்ளனர்.


ஹசி நம்பிக்கை: ஆனால், மைக் ஹசி இவருக்குஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"சைமண்ட்ஸ் சுழற்பந்து வீச்சை நன்றாக சமாளிக்ககூடியவர். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Monday, September 1, 2008

பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவை இங்கிலாந்து அணி வென்றது

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' போட்டிகளில் விளையாடுகிறது. பாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் டான்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்தியாவின் சுலக்ஷனா நாயக்(0), ஜெயா சர்மா(0) என மோசமான துவக்கம் தந்தனர். அடுத்து வந்த தேவிகா பால்சிகார்(4), அமித் சர்மா(6) என தொடர்ந்து சொதப்ப, இந்திய அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி 53 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மிதாலியுடன் ஜோடி சேர்ந்த மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய பெண்கள் அணி 45.1 ஓவரில் 102 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் ஹோலி கால்வின் 4 விக்கெட்டுகளையும், கத்தரின் புரூன்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து பெண்கள் அணிக்கு சராக் டெய்லர்(75), கரோலின் அட்கின்ஸ்(24) ஜோடி அருமையான துவக்கம் தந்தனர். இவர்கள் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 24.3 ஓவரில் 103 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. துல்லியமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் கத்தரின் புரூன்ட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Saturday, August 30, 2008

மீன் பிடிக்கச் சென்றதால் ஆஸி அணியில் இருந்து சைமண்ட்ஸ் நீக்கம்

ஆஸ்திரேலியாவில் பங்களாதேஷ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இந்த தொடருக்கான ஆஸி அணியில் சைமண்ட்சும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வர்வின் நகரில் சனி அன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், வெள்ளி அன்று ஆஸி அணியின் வீரர்களின் ஆலோசனைக் கூட்டமும், பின்னர் பயிற்சியும் நடப்பதாக இருந்தது.

வெள்ளிக் கிழமை காலையிலேயே டர்வின் நகரின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்று விட்டார் சைமண்ட்ஸ். இதனால் ஆஸி அனியின் நிர்வாகத்தினர் சைமண்ட்சை தொடரில் இருந்து நீக்கி, அவரை பிரிஸ்பேனுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

சைமண்ட்ஸ் இதே போல் பல தடவைகள் பிரச்சினைகளில் மாட்டி இருப்பது நினைவில் இருக்கலாம்.


தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

மீன் பிடிக்கச் சென்றதால் ஆஸி அணியில் இருந்து சைமண்ட்ஸ் நீக்கம்

ஆஸ்திரேலியாவில் பங்களாதேஷ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இந்த தொடருக்கான ஆஸி அணியில் சைமண்ட்சும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வர்வின் நகரில் சனி அன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், வெள்ளி அன்று ஆஸி அணியின் வீரர்களின் ஆலோசனைக் கூட்டமும், பின்னர் பயிற்சியும் நடப்பதாக இருந்தது.

வெள்ளிக் கிழமை காலையிலேயே டர்வின் நகரின் கடற்கரையில் மீன் பிடிக்க சென்று விட்டார் சைமண்ட்ஸ். இதனால் ஆஸி அனியின் நிர்வாகத்தினர் சைமண்ட்சை தொடரில் இருந்து நீக்கி, அவரை பிரிஸ்பேனுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

சைமண்ட்ஸ் இதே போல் பல தடவைகள் பிரச்சினைகளில் மாட்டி இருப்பது நினைவில் இருக்கலாம்.


தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

Friday, August 29, 2008

இந்திய அணி 2009 மார்ச்சில் நியூசியில் சுற்றுப் பயணம்

இந்தியா- நியூசி., தொடர்: பி.சி.சி.ஐ., அறிவிப்புமும்பை: நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒரு 'டுவென்டி-20', ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது. கடந்த 2002-2003ம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் ஒரு 'டுவென்டி20' போட்டியில் வரும் 2009ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மோதுகிறது. பிறகு மார்ச் 8 முதல் 20ம் தேதி வரை ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.


'டுவென்டி20 ஆட்டம் மார்ச் 6 ல் வெலிங்டன் நகரில் நடக்கின்றது.

முதல் ஒருநாள் போட்டி மார்ச் 8ல் நேப்பியரிலும், 2வது ஒருநாள் மார்ச் 11 ஹாமில்டனிலும், 3வது ஒருநாள் மார்ச் 14 ஆக்லாந்திலும், 4வது ஒருநாள் மார்ச் 17 வெலிங்டனிலும்,5வது ஒருநாள் மார்ச் 20 கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெறுகின்றது.

முதல் டெஸ்ட்மார்ச் 26-30 ஹாமில்டனிலும், 2வது டெஸ்ட் ஏப்.3-7 வெலிங்டனிலும் நடக்கின்றன.

ஒருநாள் போட்டிகள் பகலிரவு ஆட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி : தினமலர்

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

இந்தியா- இலங்கை 5-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை வெற்றி

இந்தியாவிற்கு எதிரான 5-வது ஒரு நாள் போட்டியில் டாஸில் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6விக்கெட்டுகளை இழந்து 227 ரன் எடுத்தது. இலங்கை அனியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் முபாரக்கும், துஷாராவும் இணைந்து மதிப்பான எண்ணிக்கையை எட்டினர்.

மழையினால் ஆட்டம் தடை பட்டதால் ஓவர்கள் குறைக்கபட்டு வெற்றி இலக்கு 216 ஆக நிர்ணயிக்கப்பட்து. இதனையடுத்து 216 ரன் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 26.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்படி இலங்கை 112 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முக்கியத்துவம் இல்லாத இப்போட்டியில் தோற்றாலும் 3-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி ஐடியா கோப்பையை வென்றது.

தமிழ் பாடல்கள் - 3GP வீடியோ பார்மேட்டில் - செல் பேசிகளில் சுலபமாக பார்க்க

ஐ.சி.சி., ரேங்கிங்: தோனி 'நம்பர்-1'

ஐ.சி.சி., ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான புதிய ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று ஒரு நாள் போட்டிகளுக்கான புதிய ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அசத்தி வரும் இவர் 803 புள்ளிகள் பெற்றுள்ளார்.

தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் 2வது இடத்துக்கு பின்தள்ளப் பட்டுள்ளார். மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தன்வசம் வைத்துள்ளார். சச்சின் 728 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளார். பார்ம் இல்லாமல் தவித்து வரும் யுவராஜ் 18வது, காம்பிர் 27வது இடத்தில் இருக்கின்றனர்.





பவுலர்களுக்கான ரேங்கிங்கில் முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலியாவின் நாதன் பிராக்கன், நியூசிலாந்தின் வெட்டோரி, ஷேன் பாண்ட் பிடித்துள்ளனர். "டாப்-20' வீரர்கள் வரிசையில் ஜாகிர் கானை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் இல்லை. இவர் 14வது இடத்திலிருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என வென்ற போதும் இந்திய அணி (114) தொடர்ந்து 4வது இடத்திலேயே இருக்கிறது.

செய்தி : தினமலர்

Wednesday, August 27, 2008

ஐடியா கோப்பை- இந்திய அணி வென்றது - வாஸ் சாதனை

இந்தியா-இலங்கை இடையேயான 4-வது ஒரு நாள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவரில் 258 ரன் எடுத்தது. இந்திய அணியின் ரெய்னா 76 ரன்களும், தோனி 71 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் துசாரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 259 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 46.3 ஓவரில் 212 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் ஜெயசூர்யா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஹர்பஜன் 3 விக்கெட்களையும், முனாப் பட்டேல், யுவராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், இதனையடுத்து இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஐடியா கோப்பை ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.




இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாஸ் சாதனை

இன்றைய போட்டியில் யுவராஜ் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியின் சமிந்தா வாஸ் 400 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.

Sunday, August 24, 2008

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையேயான 3-வது ஒரு நாள் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50ஓவரில் 237 ரன் எடுத்தது. இந்திய அணியின் ரெய்னா 53 ரன்களும், தோனி 76 ரன்களும் எடுத்தனர். மெண்டீஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 238 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 49 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் ஜெயவர்த்தனா 94 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஜாகீர் கான், முனாப் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், இதனையடுத்து இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.




இந்திய அணியின் தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Friday, August 15, 2008

யுவராஜ் சிங் 172 ரன்கள் - இந்திய அணி வெற்றி

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே வரும் ஆகஸ்ட் 18 ந்தேதி ஒருநாள் ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இன்று இலங்கை XI அணிக்கு இந்திய அணிக்கும் மாதிரி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்திய அணி தனது முழு வீரர்களுடன் களம் இறங்கியது. இலங்கை அணியில் தரங்கா, வர்ண்பூரா, கபூகேதரா, சமரா சில்வா ஆகிய முக்கிய வீரர்கள் ஆடினர்.

டாள் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் சார்பில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 121 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். இதில் 13 சிக்சர்களும், 8 போரும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 250 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முபாரக் 60 ரன்களும், தரங்கா 50 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என நம்பலாம்.

Friday, August 8, 2008

ஒருநாள் கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு - சச்சின், கோகிலுக்கு வாய்ப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான(மினி உலககோப்பை) இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விறு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் நாளை கொழும்புவில் துவங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நடந்தது. ஒருநாள் போட்டிக்கான அணியின் காயம் காரணமாக கடந்த வங்கதேச தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத சச்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூத்த விரர்களான கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தால் தடை செய்யப்பட்டிருந்து ஹர்பஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அறிமுக வீரராக டில்லியின் விராத் ஹோஹ்லி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்சி அடிப்படையில் இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி(மினி உலககோப்பை) தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சுரேஷ் ரெய்னா, விராத் ஹோஹ்லி, ரோகித் சர்மா, பிரவீண் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அணி விவரம்: இலங்கை தொடருக்கு: தோனி(கேப்டன்), யுவராஜ்(துணை கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், விராத் ஹோஹ்லி, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஆர்.பி. சிங், பிராயகன் ஓஜா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், முனாப் படேல்.


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு: தோனி(கேப்டன்), யுவராஜ்(துணை கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், விராத் ஹோஹ்லி, ஜாகிர் கான், பிரவீண் குமார், ஆர்.பி. சிங், பிராயகன் ஓஜா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா.

செய்தி : தினமலர்

Sunday, August 3, 2008

இங்கி. கிரிக்கெட்டில் பரபரப்பு - வாகன், காலிங்வுட் ராஜினாமா

இங்கிலாந்து அணியில் டெஸ்ட் கேப்டனும், ஒருநாள் கேப்டனும் ஒரே நாளில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தோல்விகளுக்கு பொறுப்பேற்று அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.




அதே போல் ஒருநாள் போட்டிகளில் காலிங்வுட் கேப்டனாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு இடையேயான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது. இதனாலும், தனது ஆட்டத்திறன் கேப்டன் பொறுப்பால் பாதிக்கப்படுவதாகவும் கூறி காலிங்வுட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஒரே நாளில் இரண்டு கேப்டன்களும் ராஜினாமா செய்தது இங்கிலாந்து கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் இன்னும் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடைசிப் போட்டி வரும் 7 ம்தேதி தொடங்குகின்றது. அந்த போட்டிக்கு பீட்டர்சன் தலைமை வகிப்பார் என்று தெரிகின்றது.

இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா


காலி: காலி நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா வீழ்த்தி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது.

காலி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரேந்திரஷேவாக்கின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்களைக் குவித்தது.

பின்னர் ஆடிய இலங்கை 292 ரன்களில் சுருட்டப்பட்டது. இதையடுத்து 37 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில், கம்பீர், ஷேவாக், ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா 269 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற இலக்குடன் இலங்கை தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால் இந்திய சுழற் பந்து வீச்சையும், வேகப்பந்து வீச்சையும் சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் மடமடவென சரிந்தனர்.

குறிப்பாக ஹர்பஜன் சிங் மற்றும் இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு இலங்கையை முறித்துப் போட்டு விட்டது.

சமர வீரா, தில்ஷானைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். சமர வீரா 67 ரன்களை சேர்த்தார். தில்ஷான் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில்,136 ரன்களுக்கு இலங்கையை சுருட்டி 170 ரன்களில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

ஹர்பஜன் சிங் நான்கு விக்கெட்களையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்களையும், கும்ப்ளே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜாகிர் கானுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

ஆட்ட நாயகனாக வீரேந்திரஷேவாக் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

Thursday, July 31, 2008

இலங்கையை பழிதீர்க்குமா இந்தியா?: இன்று 2வது டெஸ்ட்

காலே: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலேயில் துவங்குகிறது. கொழும்பு டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் பழிதீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொழும்புவில் நடந்த முதல் டெஸ்டில் முரளிதரன், மெண்டிஸ் சுழற்பந்து வீச்சில் நிலைதடுமாறிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.


எழுச்சி தேவை: கொழும்பு டெஸ்டில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களான சேவக், சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் பெரும் ஏமாற்றம் அளித்தனர். இன்று துவங்கும் இரண்டாவது டெஸ்டில் இவர்கள் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் இந்திய அணிக்கு எழுச்சி தேவை. வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிக்க தவறுவது அணிக்கு நெருக்கடியாக உள்ளது. தவிர, சுழல் ஜாம்பவான் அனில் கும்ளே கொழும்புவில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திக் கொடுத்தார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் முழுத் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இலங்கை அணியை, இந்தியா வீழ்த்த முடியும்.


பீல்டிங் கவலை: இந்திய அணியின் பீல்டிங் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக கொழும்பு டெஸ்டில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய தினேஷ் கார்த்திக், இன்றைய போட்டியில் பொறுப்புடன் விளையாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். காலே போட்டி குறித்து இந்திய கேப்டன் அனில் கும்ளே கூறுகையில்,"" முதல் டெஸ்டில் பங்கேற்ற அதே அணியே இன்றைய போட்டியிலும் களமிறங்கும். விக்கெட் கீப்பிங்கில் தினேஷ் கார்த்திக் ஏமாற்றம் அளித்தது உண்மை. இருப்பினும் தோல்விக்கு அவர் மற்றும் காரணமல்ல. இந்திய வீரர்கள் அனைவரின் செயல்பாடுமே திருப்திகரமாக அமையவில்லை. அதனால் தான் தோல்வி அடைய நேரிட்டது. இன்றைய போட்டியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம்,'' என்றார்.


இலங்கை அதிரடி: இலங்கை அணி பேட்டிங், பவுலிங்கில் வலுவான நிலையில் உள்ளது. கொழும்பு டெஸ்டில் இலங்கை வீரர்கள் நான்கு பேர் சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர். இலங்கை பேட்ஸ்மேன்களை விரைவில் வெளியேற்றுவது, இந்திய பந்து வீச்சாளர்களின் முக்கிய கடமையாக உள்ளது.


சுழல் கூட்டணி: இலங்கை அணியின் வெற்றி நாயகர்களாக வலம் வருகின்றனர் முரளிதரன் மற்றும் அஜந்தா மெண்டிஸ். முரளிதரனின் அனுபவ பந்து வீச்சு ஒரு பக்கம் மிரட்ட, அறிமுக போட்டியிலேயே அசத்தி சூப்பர் பார்மில் உள்ளார் மெண்டிஸ். காலே டெஸ்டிலும் இவர்களது மிரட்டல் பந்து வீச்சு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சை பலப்படுத்த அறிமுக வீரராக தம்மிகா பிரசாத் சேர்க்கப்பட்டுள்ளது இலங்கை அணிக்கு கூடுதல் பலம்.


இன்றைய போட்டி குறித்து இலங்கை கேப்டன் ஜெயவர்தனா கூறுகையில்,"" காலே டெஸ்டுக்கு அணியில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் டெஸ்டில் சுழற் பந்து வீச்சில் கலக்கிய முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி, இரண்டாவது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும். வேகப்பந்து வீச்சுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை உறுதியாக கைப்பற்றுவோம்,'' என்றார்.


அணி வருமாறு: இலங்கை: ஜெயவர்தனா (கேப்டன்),வாண்டார்ட், வர்ணபுரா, சங்ககரா, சமரவீரா, சமர சில்வா, தில்ஷன், பிரசன்னா ஜெயவர்தனா(விக்., கீப்பர்), வாஸ், முரளிதரன், மெண்டிஸ், துஷாரா, குலசேகரா, கபுகேதரா , பிரசாத்.


இந்தியா: கும்ளே (கேப்டன்), சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல், ரோகித், முனாப், இஷாந்த் சர்மா, ஆர்.பி. சிங், ஜாகிர் கான், தினேஷ் கார்த்திக், ஓஜா.


டாஸ் முக்கியம்: காலே டெஸ்டில் இந்திய அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியம். காலே ஆடுகளம் குறித்து அதன் பொறுப்பாளர் வர்ணவீரா கூறுகையில்,"" காலே ஆடுகளம் முதல் இரண்டு நாட்கள் வரை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். மூன்றாவது நாள் முதல் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும். இந்தியா டாஸ் ஜெயிக்க தவறும் பட்சத்தில், மீண்டும் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.

செய்தி : தினமலர்

Monday, July 28, 2008

இந்திய கிரிக்கெட் அணிக்கு கண்டனங்கள்

கொழும்பு டெஸ்டின் மோசமான தோல்வி, இந்திய அணிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பிய நம்மவர்கள் பரிதாப தோல்விக்கு வழிவகுத்தனர். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது.

இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை பதிவு செய்தது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை உள்ளடக்கிய இந்திய அணி, இலங்கை மண்ணில் தடுமாறி உள்ளது. இத்தோல்விக்கு ஐந்து காரணங்கள் முக்கியமானவைகளாக அமைந்தன. அவை வருமாறு...



* இந்திய அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ளேவின் சுழற்பந்து வீச்சும் ஒரு முக்கிய காரணமாக அமையும். ஆனால் கொழும்பு டெஸ்டில் கும்ளே 120 ரன்களை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. டெஸ்ட் அரங்கில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தாமல் இருப்பது கும்ளேவுக்கு இது ஐந்தாவது முறை. ஐந்தில் நான்கு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.



* தோனி இல்லாத காரணத்தால், விக்கெட் கீப்பிங் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக் சொதப்பினார். பல முறை கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்ட இவர், இலங்கை 600 ரன்கள் குவிக்க வழி வகுத்தார். தவிர, பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வெறும் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.



* இலங்கை வீரர்கள் வர்ணபுரா, சமரவீரா, ஜெயவர்தனா, தில்ஷன் என நான்கு வீரர்கள் சதம் கடந்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களின் அபார ஆட்டத்தால் இலங்கை 600 ரன்களை எட்ட முடிந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை பதிவு செய்த மிகப் பெரிய இலக்கே, இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தது.



* இந்திய அணியின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் சச்சின் (27,12), கங்குலி(23,4), டிராவிட்(14,10) மூவரும் பெரும் ஏமாற்றம் அளித் தனர். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இவர்கள் எடுத்தது வெறும் 90 ரன்களே.



* தங்களது மாயாஜால சுழற்பந்துவீச்சில், இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தது இலங்கையின் முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி. இவர்கள் 20 க்கு 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் தோல்விக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.



கடும் கண்டனம்: இந்திய அணியின் தோல்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் கிரிக்கெட் போர்டு செயலர் நிரஞ்சன் ஷா. இவர் கூறுகையில்,"" கொழும்பு டெஸ்டில் சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண் போன்ற சீனியர் வீரர்களின் செயல்பாடு அணிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை தொடருக்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு தான் தயாராயினர். இருப்பினும் மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்து விட்டது.



முதல் போட்டியின் தோல்விக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் பதிலடி கொடுக்க வேண்டும். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.



அதிபர் பாராட்டு: கொழும்பு டெஸ்டில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு அதிபர் ராஜபக்சே பாராட்டு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், ""இந்திய அணியின் தோல்விக்கு முரளிதரன், மெண்டிசின் சிறப்பான பவுலிங்கே காரணம். வெற்றி பெற்ற அணிக்கும், கேப்டன் ஜெய வர்தனாவுக்கும் பாராட்டுக்கள்,'' என்றார்.


செய்தி : தினமலர்

Saturday, July 26, 2008

இந்தியா இலங்கையிடம் இன்னிங்ஸ் & 239 ரன்களில் தோல்வி

கொழும்பு: கொழும்பு டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொழும்புவில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 600 ரன்கள் குவித்து இலங்கை ஆட்டத்தை டிக்ளர் செய்தது.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு வெறும் 159 ரன்கள் எடுத்திருந்தது. "பாலோ ஆன்' தவிர்க்க 242 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் நான்காவது நாள் களமிறங்கிய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்து, "பாலோ ஆன்' ஆனது. 377 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை வீரர் முரளிதரன் பந்து வீச்சில் துவக்க வீரர் சேவக்(13) விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் இரண்டு இன்னிங்சிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

செய்தி : தினமலர்

Thursday, July 10, 2008

கிரிக்கெட்டில் அடுத்த கட்டம் - 40 ஓவர் அல்லது இரண்டு இன்னிங்ஸ் கொண்ட 20 ஓவர் போட்டி

40 ஓவர் ஒருநாள் போட்டி அல்லது இரண்டு இன்னிங்ஸ்களைக் கொண்ட இருபதுக்கு20 போட்டி நடத்த ஆலோசனை.
ஒரு நாள் போட்டியில் மாற்றம் செய்யப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது. உள்நாட்டு "டுவென்டி-20' போட்டிகள், பார்வையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றதால், ஒரு நாள் போட்டியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டது. இது குறித்து ஐ.சி.சி., மானேஜர் டேவ் ரிச்சர்ட்சன் அளித்த பேட்டி: ஒரு நாள், டெஸ்ட் மற்றும் "டுவென்டி-20' கிரிக்கெட் மூன்றும் முக்கியமாக கருதப்படுகிறது. பாரம்பரியமான டெஸ்ட் போட்டி, வீரர்களின் திறமையை வளர்ப்பதால் என்றும் முதலிடம் தரப்படும். ஒரு நாள் கிரிக்கெட் ஆரம்ப காலத்தில் 60 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. பின்னர் 50 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. உள்ளூர் போட்டியாக அறிமுகமான "டுவென்டி-20' கிரிக்கெட், தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவை கிரிக்கெட் வீரர்கள் பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பை வழங்கி வருகிறது. குறைந்த நேரத்தில் அதிரடி பொழுதுபோக்கை வழங்குகிறது. இதனால் பார்வையாளர்கள் மிகவும் ரசித்து பார்க்கின்றனர். ஐ.பி.எல்., போன்ற அமைப்புகள் தனியார் உரிமையாளர்களுக்கு அணிகளை விற்றுள்ளன. இருப்பினும் கிரிக்கெட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால், பாதிப்பு ஏற்படாது. "டுவென்டி-20' வளர்ந்து வரும் சூழ்நிலையில், ஓரு நாள் போட்டியின் ஈர்ப்பு குறைந்துவிடும் அபாயம் உள்ளது. மக்கள் ரசனைக்கு ஏற்ப, இந்த போட்டியில் மாற்றம் செய்யப்பட வேண்டும். 40 ஓவர், இரண்டு இன்னிங்ஸ் கொண்ட "டுவென்டி-20' போட்டி என்று இரண்டு திட்டங்கள் ஆலோசிக்கப்படும். ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு குறைந்தது 7 மணி நேர கால அவகாசம் தேவைப் படுவதால், இந்த இரண்டு மாற்றங்கள் மட்டுமே சாத்தியமாகும். அதிக அளவிலான ஒரு நாள் போட்டிகள், கிரிக்கெட் வளர்ச்சிக்கு எப்போதும் உதவாது. இவ்வாறு ரிச்சர்ட்சன் கூறினார்.

செய்தி : தினமலர்

Monday, July 7, 2008

ஆசிய கோப்பை கிரிக்கெட் - மெண்டிஸ் சுழலில் இந்தியா கோப்பையை இழந்தது


ஆசிய கோப்பை பைனலில் சொதப்பலாக ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அஜந்தா மெண்டிஸ் சுழலில் பரிதாபமாக சரணடைந்தனர்.100 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசிய கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. நேற்று கராச்சியில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இந்திய அணியில் பிரவீண் குமாருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம் பெற்றார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி மிகுந்த துணிச்சலுடன் பீல்டிங் தேர்வு செய்தார்.இலங்கை அணிக்கு எடுத்த எடுப்பிலேயே "ஷாக்'. 2வது ஓவரில் இஷாந்த் பந்தை அடித்த ஜெயசூர்யா ஒரு ரன்னுக்காக ஓடி வர முற்பட்டார். பின்னர் "நோ' சொன்னார். அதற்குள் சங்ககரா பாதி தூரம் ஓடி வர, சுரேஷ் ரெய்னா நேரடி "த்ரோ செய்தார். பெயில்ஸ் பறக்க, சங்ககரா(4) பரிதாபமாக ரன் அவுட்டானார். இதற்கு பின் இஷாந்த் சர்மா விக்கெட் வேட்டை நடத்தினார். இவரது வேகத்தில் கேப்டன் ஜெயவர்தனா(11), கபுகேதரா(5), சமரசில்வா(0) அவுட்டாயினர்.


இதையடுத்து 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து இலங்கை திணறியது.இந்தச் சூழலில் ஜெயசூர்யா, தில்ஷன் பொறுப்பாக ஆடி அணியை மீட்டனர். வழக்கம் போல் அதிரடி காட்டிய ஜெயசூர்யா, ஆர்.பி.சிங் வீசிய 16வது ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 26 ரன்கள் விளாசினார். ஒரு நாள் அரங்கில் 27வது சதம் கடந்த இவர் 125 ரன்களுக்கு(9 பவுண்டரி, 5 சிக்சர்), சேவக்சுழலில் வீழ்ந்தார். மறுபக்கம் 14வது அரைசதம் கடந்த தில்ஷன் 56 ரன்களுக்கு அவுட்டானார். இலங்கை அணி 49.5 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


மெண்டிஸ் மிரட்டல்: இந்திய அணிக்கு சேவக் அதிரடி துவக்கம் தந்தார். இம்முறை காம்பிர்(6) ஏமாற்றினார். சேவக் 60 ரன்களுக்கு(12 பவுண்டரி), மெண்டிஸ் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து மிரட்டிய மெண்டிஸ் சுழலில் யுவராஜ் (0), சுரேஷ் ரெய்னா (16) ரோகித் சர்மா (3) வரிசையாக வெளியேறினர். உத்தப்பா 20, கேப்டன் தோனி 49 ரன்கள் எடுத்து அவுட்டாயினர். இந்திய அணி 39.3 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி கோப்பையை கோட்டை விட்டது. இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் மெண்டிஸ் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

Sunday, July 6, 2008

ஆசிய கோப்பை கிரிக்கெட் - கோப்பையை வெல்ல இந்தியா இலங்கை மோதல்

கராச்சி: ஆசிய கோப்பை தொடரில் இன்று நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. கடந்த முறை கோப்பையை இலங்கையிடம் பறிகொடுத்த இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது. ‘சூப்பர் பார்மில்’ இருக்கும் தோனியின் இளம் படை மீண்டும் ஒரு முறை இலங்கையை வீழ்த்தும் என நம்பலாம். முழு பலத்துடன் களமிறங்கும் இலங்கை அணியும் வெற்றியை எளிதில் விட்டுக்கொடுக்காது என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் மோதிய ‘சூப்பர்-4’ போட்டியில் 309 ரன்களை இந்தியா எளிதாக சேஸ் செய்து, அசத்தியது. இந்திய அணி பைனலுக்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போட்டியில் இலங்கை வேண்டுமென்றே விட்டுகொடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் குற்றம்சாட்டினார். இதை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மறுத்துவிட்டன.

துவக்கம் பலம்: இந்திய அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களை தான் அதிகம் நம்பி களமிறங்குகிறது. துவக்க வீரர்கள் சேவக், காம்பிர் அசத்தி வருகின்றனர். இத்தொடர் முழுவதும் அணிக்கு அதிரடியான துவக்கம் தந்துள்ளனர். இவர்களது ‘சூப்பர் பார்ம்’ தொடர்ந்தால் கடந்த 2004ல் கொழும்புவில் நடந்த ஆசிய கோப்பை பைனலில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுக்கலாம். மூன்றாவது வீரராக வரும் ரெய்னா மிரட்டி வருகிறார். 2 சதம், 2 அரைசதம் உட்பட இத்தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் ‘நம்பர்-1’ இடத்தை கைப்பற்றியுள்ளார்.

பொறுப்பான கேப்டன்: கேப்டன் தோனி சூழ்நிலையை உணர்ந்து பொறுப்புடன் பேட் செய்து வருகிறார். ‘மிடில்-ஆர்டரில்’ இவருக்கு யுவராஜ் மற்றும் ரோகித் ஆகியோர் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர்.

பவுலிங் கவலை: இந்திய அணியின் பவுலிங் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அசத்திய இஷாந்த், பிரவீண், ஆர்.பி.சிங் ஆகியோர் சொல்லிக் கொள்ளும்படி பந்துவீசவில்லை. சுழற்பந்துவீச்சில் பியுஸ் சாவ்லா, ஓஜா திணறுகின்றனர். அணியின் பீல்டிங்கும் படுமட்டமாக இருக்கிறது. இக்கட்டான நேரத்தில் சுலப ‘கேட்ச்’சுகளையும் கோட்டைவிட்டு ஏமாற்றுகின்றனர். இன்றைய போட்டியில் பவுலிங், பீல்டிங்கில் எழுச்சி காண வேண்டியது மிகவும் அவசியம்.

ஜெயசூர்யா மிரட்டல்: இலங்கை அணியின் பேட்டிங் பிரமாதமாக இருக்கிறது. ஜெயசூர்யா வாணவேடிக்கை காட்டுகிறார். சங்ககரா இத்தொடரில் இதுவரை மூன்று சதங்கள் பதிவு செய்துள்ளார்.இவர்கள் இருவரையும் விரைவில் வெளியேற்றினால் மட்டுமே இந்திய வீரர்கள் வெற்றியை நினைத்து பார்க்க முடியும். கபுகேதரா, ஜெயவர்தனா, சமரசில்வா, தில்ஷன் என பேட்டிங் படை பலமாக இருக்கிறது. பவுலிங்கில் இந்தியாவை காட்டிலும் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கராச்சி மைதானத்தில் தொடர்ந்து போட்டிகள் நடந்து வருவதால், ஆடுகளம் இன்று சுழலுக்கு அதிகம் ஒத்துழைக்கும். இதனால் முரளிதரன், மெண்டிஸ் போன்றோர் நெருக்கடி தரலாம். இதனை சமாளித்து இந்திய அணி கோப்பை கைப்பற்றும் என நம்புவோம்.

Wednesday, July 2, 2008

ஒருநாள் கிரிக்கெட் - நியூஸிலாந்து புதிய உலக சாதனை

UPDATE : இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இறுதி போட்டியில் பங்கேற்க நாளைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் நியூஸிலாந்து அணி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இன்று நியூஸிலாந்துக்கும் அயர்லாந்து அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அபாரமாக 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 402 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் மார்ஷல் 161 ரன்களும் மெக்கல்லம் 166 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 29 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதற்கு முன் இந்திய அணியின் 257 ரன்கள் வித்தியாசமே அதிகபடசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 26, 2008

சேவாக் சதம் - பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 299 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சொயிப் மாலிக் 125 ரன்களும், யூனுஸ் கான் 59 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 300 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடத்துவங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. கம்பீர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து வந்து சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடினார். அதே போல் சேவாக்கும் சிறிது நேரத்தில் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். ரெய்னா 84 ரன்களில் ஆட்டம் இழந்தார். சேவாக் அபாரமாக ஆடி 80 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். அவர் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டிய யுவராஜ் சிங் 48 ரன்கள் எடுத்தார். இந்திய தனது 42.1 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணியை அமீரக அணி எதிர் கொண்டது. அதில் இலங்கை அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அனியின் மெண்டிஸ் அபாரமாக பந்து வீசி 22 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இலங்கை 290/9 50 ஓவரில்
யு.ஏ.இ 148/10 36.3 ஓவரில்

Wednesday, June 25, 2008

தோனி, ரெய்னா சதம் இந்தியா வெற்றி! ஆசிய கோப்பை கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்கங்கை எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக் மற்றும் கம்பீர் அபாரமாக ஆடி முறையே 78, மற்றும் 51 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த தோனியும், ரெய்னாவும் ரன்களை மிக விரைவாக குவித்தனர். தோனி 96 பந்துகளில் 109* ரன்களும், ரெய்னா 68 பந்துகளில் 101 ரன்களும் குவித்தனர். 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்திருந்தது.





இதனைத் தொடர்ந்து 375 ரன்களை வெற்றி இழக்காக கொண்டு ஆடத்துவங்கிய ஹாங்காங் அணியின் விக்கெட்டுகள் சீராக விழுந்து கொண்டே இருந்தன. அந்த அணி 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சாவ்லா 4 விக்கெட்களையும், சேவாக் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொள்கின்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா - ஹாங்காங் இன்று மோதல்

பாகிஸ்தானின் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் ஆட்டங்கள் நேற்று துவங்கின. முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் - ஹாங்காங்கை எதிர்த்தும், பங்களாதேஷ் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்தும் ஆடின.
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் விளையாடியது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 288 ரன் எடுத்தது. யூனுஸ் கான் 67 ரன்களும், பவாத் ஆலம் 63 ரன்களும், சொகைல் தன்வீர் 59 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து விளையாட தொடங்கிய ஹாங்காங் அணி, 37.2 ஓவரில் அனைத்-து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன் எடுத்தது. இதன்படி பாகிஸ்தான் 155 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேஷமும்,
வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் மோதின. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அனியின் அஷ்ரபுல் 109 ரன்களும், ரபிக்குல் ஹசன் 83 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன் எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 96 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் குர்ராம் கான் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். வங்கதேச தரப்பில் அப்துர் ரசாக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியா ஹாங்காங்கையும், இலங்கை வங்காளதேசத்தையும் எதிர்கொள்கின்றது

Tuesday, June 10, 2008

பாக் - இந்திய கிரிக்கெட் - இந்தியா சாதனை வெற்றி

மிர்பூர் : வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின .டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. சேவாக் அதிகபட்சமாக 89 ரன்களும், கம்பீர் 62 ரன்களும், யுவராஜ் சிங் 55 ரன்களும் எடுத்தனர். சேவாக்கும், கம்பீரும் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 21 ஓவரில் 155 ரன்கள் எடுத்தனர் . பாக் தரப்பில் உமர் குல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 331 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. பிரவீன் குமாரின் அபார பந்து வீச்சில் அதன் விக்கெட்கள் சரிந்தன. மாலிக் மட்டும் அரை சதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சேவாக் தட்டிச் சென்றார். இதன் மூலம் முத்தரப்பு கிரிக்கெட்டின் இறுதியில் இந்தியா மோத உள்ளது.




இந்தியாவின் சாதனை

1.பாகிஸ்தான் அணி கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று வைத்திருந்த சாதனையை இந்தியா இன்று முறியடித்துள்ளது.

2. பாகிஸ்தானை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது இந்திய அணிக்கு இதுவே முதல் முறை. இதற்கு முன் 2005 ல் 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தான் சாதனையாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவை 2005 ல் 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையைக் கொண்டுள்ளது.

Sunday, June 8, 2008

முத்தரப்பு கிரிக்கெட் - பாக் - பங்களாதேஷ் இன்று மோதல்

மிர்பூர்:இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று மிர்பூரில் துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசஅணிகள் மோதுகின்றன. தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற உறுதியுடன் பாகிஸ்தானும், சொந்த மண்ணில் விளையாடும் உற்சாகத்தில் வங்கதேசமும் களமிறங்குகின்றன.

வங்கதேசத்தின் மிர்பூரில் இந்தியா, பாகிஸ் தான், வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மட்டுமே மோதும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் அதிகமுக்கியத்துவம் பெறுகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி சமீபகாலமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் 2006 உலக கோப்பை தொடரில் பைனலுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைஅணிகளை வீழ்த்தி, அசத்தியது.

இளமையின் எழுச்சி: சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் இளம் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். அனுபவ சச்சின், கங்குலி இல்லாதநிலையில் டில்லி அணிக்கு சூப்பர் துவக்கம் தந்த சேவக், காம்பிர் கூட்டணி ஆட்டத்தை துவக்கலாம். மிடில்ஆர்டரை' பலப்படுத்த ரோகித், ரெய்னா, யுவராஜ், தோனி, உத்தப்பா என வலுவான பேட்டிங் படை தயாராக இருக்கிறது. யூசுப் மற்றும் இர்பான் பதான் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைகொடுப்பார்கள். இஷாந்த், பிரவீண், ஆர்.பி.சிங் என பந்துவீச்சும் பலமாக இருக்கிறது. தடை காரணமாக இடம்பெறாத ஹர்பஜன் இடத்தை நிரப்ப பியூஸ் சாவ்லா, ஓஜா தயாராக இருக்கின்றனர்.

தொடருமா வெற்றிநடை: இந்நிலையில் இன்று நடக்கும் முக்கிய போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணியில் தடை விதிக்கப்பட்ட அக்தர் மற்றும் போதை பொருள் வழக்கில் சிக்கிய ஆசிப் இடம்பெறவில்லை. தொடர்ந்து 11 ஒரு நாள் போட்டிகளில் வென்ற உற்சாகத்தில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. கடைசியாக சொந்த மண்ணில் நடந்த தொடரில் 50 என வங்கதேசத்தை முழுமையாக தோற்கடித்தது.

மிரட்டும் யூ' கூட்டணி: துவக்க வீரர் சல்மான் பட் அணிக்கு நல்ல துவக்கம் அமைத்து தரக்கூடியவர். யூனிஸ்யூசுப் கூட்டணி எதிரணியின் பவுலர்களுக்கு சிக்கல் தரலாம்.மிடில்ஆர்டரில்' ரன்விகிதத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்த அப்ரிதி, மிஸ்பா தயாராக இருக்கின்றனர். விக்கெட் கீப்பர் அக்மலும் ரன் வேட்டைக்கு உதவுவார் என்பதால் வங்கதேச பவுலர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

கவனமாக விளையாடுவோம்: இத்தொடரில் வங்கதேசம் கடும் சவால் தரும் என்பதை மறுக்க முடியாது. தொடரை வெல்வதே எங்கள் குறிக்கோள் என்கிறார் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக். இது குறித்து அவர் கூறுகையில்,வங்கதேச அணி சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும். இதனால் இன்றைய போட்டியில் கவனமாக செயல்படுவோம். முதல் போட்டியில் வென்று, நம்பிக்கையை அதிகரித்து கொள்வோம். நீண்ட காலமாக விளையாடி வருவதால் இங்குள்ள மைதானங்களை பற்றி நன்குஅறிவோம்,'' என்றார்.

தன்வீர் தயார்: அக்தர், ஆசிப் இல்லாதநிலையிலும் பாகிஸ்தான் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய தன்வீர் வேகத்தில் மிரட்ட காத்திருக்கிறார். இவருக்கு உமர் குல் நல்ல ஒத்துழைப்பு தருவார். இப்திகார் ராவ், சோகைல் கான், பவாத் ஆலம் ஆகியோர் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.

அஷ்ரபுல் நம்பிக்கை: வங்கதேசத்தை பொறுத்தவரை எதிரணிக்கு எந்த நேரத்திலும் அதிர்ச்சி தோல்வி தரலாம். என்றாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிடுகிறது. இந்தாண்டு போட்டிகளில் சொல்லிக் கொள்ளும் படி செயல்படவில்லை. சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வெற்றியை விரைவில் பறிகொடுக்காமல் இறுதிவரை போராடி ஆறுதல் அளித்தது. முஷிபூர் ரஹிம் துவக்கத்தில் சிறப்பாக விளையாடுகிறார். மோர்டசா, அப்துர் ரஹிம், சதாகத் ஹீசைன் பந்துவீச்சில் வலு சேர்க்கின்றனர்.பேட்டிங்கில் கேப்டன் அஷ்ரபுல்லை அதிகம் சார்ந்துள்ளது. இவர் ஜொலித்தால் மட்டுமே எதிரணிக்கு சவால் தரும் இலக்கை எட்ட முடியும் என்ற நிலையில் இருக்கிறது.

சிறந்த பாடம்: அஷ்ரபுல்வங்கதேச கேப்டன் அஷ்ரபுல் கூறுகையில்,பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். முத்தரப்பு தொடர் சிறந்த பாடமாக அமையும். கடந்த கால தோல்விகளில் இருந்து தவறை திருத்திக்கொண்டு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். எனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறேன். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், அதிர ரன்கள் குவிக்க முடியவில்லை. சொந்த மண்ணில் விளையாட இருப்பதால், வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். எதிரணியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம். இந்த யுக்திகளை வெளிப்படையாக கூற விரும்பவில்லை,''என்றார்.

Courtesy : Dinamalar

Sunday, June 1, 2008

சென்னைக்கு இரண்டாமிடம் - IPL கிரிக்கெட் இராஜஸ்தான் சாம்பியன்

கடந்த இரண்டு மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த IPL கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இராஜஸ்தான் அணி சென்னை அணியை வென்று IPL சாம்பியன்ஷிப்பின் முதல் கோப்பையை வென்றது. கடந்த ஏப்ரல் 18 ந்தேதி முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இந்தியாவில் உள்ள 8 அணிகளைக் கொண்டு Twnety 20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை, ஜெய்ப்பூர், மொகாலி, டெல்லி,கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் பலகட்டங்களாக மோதின. இதில் சென்னை மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜஸ்தான் ராயல் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இன்று நடந்த (ஜூன் 1) இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜெய்ப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்ந்த்தெடுத்தது. சென்னை அணியின் சார்பில் வித்யுத் சிவராமகிருஷ்ணனும், பார்த்திவ் பட்டேலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வித்யுத் 16 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடினார். பட்டேல் 38 ரன்னிலும், ரெய்னா 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மோர்க்கல் 16 ரன்களும், தோனி 29* ரன்களும் எடுத்தனர். ஜெய்ப்பூர் தரப்பில் யூசுப் பதான் முக்கிய தருணங்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி சென்னையின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினார். 20 ஓவரில் இறுதியில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 164 ரன்கள் என்ற வெற்றி இழக்கை கொண்டு ஆடத்துவங்கிய இராஜஸ்தான் அணியின் பட்டேலால் நல்ல துவக்கத்தைத் தர இயலவில்லை. அவர் 11 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து கோனி பந்தில் ஆட்டமிழந்தார். அதை அடுத்து வந்த கம்ரான் அக்மலும் விரைவில் ரன் அவுட் ஆகினார். அஸ்னோத்கர் 20 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து வந்த வாட்சனும் யூசுப் பதானும் இராஜஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். வாட்சன் 28 ரன்களில் அவுட்டானார். இதை அடுத்த வந்த கைப் 11 ரன்னிலும், ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக ஆட்டமிழந்தனர். மற்றொரு முனையில் யூசுப் பதான் அதிரடியாக ஆடினார். அவரும் 56 ரன்களில் இரண்டு ஓவரில் 18 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. 19 வது வீசிய நிடினி 10 ரன்கள் அடிக்கப்பட கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பாலாஜி வீசினார். அதன் கடைசி பந்தில் வெற்றிக்கான ரன்னை சொகைல் தன்வீர் அடித்து இராஜஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.


ஆட்ட நாயகன் யூசுப் பதான்





அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி சாம்பியன் பட்டதை வென்றது. சென்னை அணி இங்கும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கும்மி XI மூன்றாம் இடத்தையும், இம்சையின் திருச்சி நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற நெல்லை அணிக்கு வாழ்த்துக்கள்

சொதப்பிய அரை இறுதிகள் - இறுதியில் சென்னை - இராஜஸ்தான் இன்று மோதல் - IPL கிரிக்கெட்


மகிழ்ச்சியில் சென்னை அணியினர்
ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றது. மும்பையில் நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை, ராஜஸ்தான் அணி அபாரமாக ஆடி வீழ்த்தியது. மிகவும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் முழுவதும் ஒரு சார்பாக இருந்தது.
இந்திலையில் IPL கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதியில் சென்னை மற்றும் பஞ்சாப் மொகாலி அணிகள் மோதின. இதில்
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரமேஷ் பவார் அதிகபட்சமாக 28* ரன்கள் எடுத்தார். நிடினி, கோனி மற்றும் மொர்கெல் தலா 2 விக்கெட்டுகளையும், முரளிதரன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றநிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரைய்னா மற்றும் பார்ட்தீவ் பட்டேல் இருவரும் அரை சதம் அடித்தனர். இந்த ஆட்டம் முழுவதும் சென்னை அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தின் நாயகன் விருது நிடினிக்கு வழங்கப்பட்டது.


ஆட்ட நாயகன் நிடினி


தனது அணியின் தோல்வியால் கவலையில் பிரீத்தி ஜிந்தா
இந்நிலையில் இறுதிப் போட்டி மும்பையில் இன்று இரவு நடக்கின்றது. இதில் சென்னை அணியும், இராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் பரபரப்பாக இருக்கும் என்று நம்பலாம்.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்கு முன் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.


Friday, May 30, 2008

டெல்லியை வீழ்த்தி இராஜஸ்தான் இறுதிக்கு தகுதி - IPl கிரிக்கெட்

IPL கிரிக்கெட்டின் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் இராஜஸ்தான் அணி டெல்லி அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள IPL கிரிக்கெட் போட்டிகளில் முதல் அரை இறுதி ஆட்டம் இன்று டெல்லி மற்றும் இராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் சேவாக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அஸ்நோத்கர் 39 ரன்களும், வாட்சன் 52 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் குவித்தனர். டெல்லி அணியில் மகரூப் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. சேவாக், கம்பீர், தவான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். தில்சான் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். அந்த அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இராஜஸ்தான் அணியில் வாட்சன் மற்றும் முனாப் படேல் இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் அரை இறுதியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடக்கும் சென்னை - பஞ்சாப் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இராஜஸ்தான் அணி வரும் ஜூன் 1 ம் தேதி இறுதி போட்டியில் விளையாடும். இன்றைய ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது 52 ரன்கள் குவித்து 3 விக்கெட்களை வீழ்த்திய ஷேன் வாட்சனுக்கு வழங்கப்பட்டது.

பங்களாதேஷ், முத்தரப்பு கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு

யூசுப் பதான் மற்றும் ஓஜாவுக்கு வாய்ப்பு.
அடுத்த மாதம் தொடங்க உள்ள பங்களாதேஷுக்கு எதிரான மற்றும் பங்களாதேஷ், மற்றும் பாகிஸ்தான் பங்கு கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய இந்திய ஒருநாள் அணியில் இருந்த முனாப் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் யூசுப் பதானும், ஓஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மூத்த வீரர்கள் டிராவிட், கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெண்டுல்கர் காயம் காரணமாக விளையாடவில்லை.
இந்திய அணிவீரர்கள் விபரம் 1. தோனி (கேப்டன்) 2. யுவராஜ் சிங்(து.கே) 3. உத்தப்பா 4. சேவாக் 5. கம்பீர் 6. ரோஹித் சர்மா 7. சுரேஷ் ரெய்னா 8. யூசுப் பதான் 9. இர்பான் பதான் 10. ஸ்ரீசாந்த் 11. இஷாந்த் சர்மா 12. பிரவீன் குமார் 13. ஆர்.பி.சிங் 14. பியூஸ் சாவ்லா 15. ஓஜா

ஐ.பி.எல் கிரிக்கெட் - முதல் அரையிறுதி போட்டி : ராஜஸ்தான்-டில்லி அணிகள் மோதல்


கடந்த ஒன்றரை மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களை தொலைக்காட்சி முன் கட்டிப் போட்ட ஐ.பி.எல்., தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் மோதிய இத்தொடரின் அரையிறுதிப்போட்டியில் விளையாட சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டில்லி அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் விளையாடவிருக்கும் அணிகள் இன்று ( 30-05-08) மற்றும் நாளை (31-05-08) நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டிகள் மூலம் தகுதி பெறவுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டி இன்று ராஜஸ்தான் அணிக்கும், டில்லி அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி சென்னை அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் புடையே நடைபெறுகிறது. தொடரின் 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டிகளில் வெறி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த 2 அரையிறுதிப்போட்டிகளில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது என்பதை நம்பலாம்.

Tuesday, May 27, 2008

சென்னை கலக்கல் - அரை இறுதிக்குத் தகுதி - IPL கிரிக்கெட்

இன்று நடைபெற்ற ஹைதராபாத்துக்கு இடையேயான தனது கடைசி ஆட்டத்தில் வென்றதன் மூலம் சென்னை அணி IPL கிரிக்கெட்டின் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரை இறுதியில் சென்னை அணி பஞ்சாப் மொகாலி அணியை எதிர் கொள்ள உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வரும் IPL கிரிக்கெட் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ளன. அரை இறுதிக்கு இராஜஸ்தான் மற்றும் மொகாலி அணிகள் சுலபமாக வெற்றி பெற்ற நிலையில் நேற்றைய மும்பை அணியின் தோல்வி டெல்லியை அரை இறுதிக்குள் எடுத்துச் சென்றது. கடைசியாக நான்காவது அணிக்கு சென்னை மற்றும் மும்பை அணிகள் போட்டியில் இருந்தன. இந்நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று முக்கிய போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வேணு கோபால் ராவ் 46 ரன்களும், தேஜா 40 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் பாலாஜி மற்றும் மோர்க்கல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.



இதைத் தொடர்ந்து 148 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் துவங்கிய சென்னை அணி 19.2 ஓவரில் 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் ரெய்னா 54 ரன்களும். தோனி 25 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். இனி லீக் ஆட்டங்களில் உள்ள 2 ஆட்டங்களின் முடிவுகளும் அரை இறுதியில் விளையாடப் போகும் அணிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்கி : 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்த ஹைதராபாத் அணியின் ரவி தேஜாவின் நல்ல படம் கிடைக்காததால் தேஜாஸ்ரீ யின் படம் போட்டுள்ளோம். ரசிகர்கள் ‘பொறுத்துக்' கொள்ளவும்.

Monday, May 26, 2008

பரபரப்பான ஆட்டத்தில் இராஜஸ்தான் வெற்றி - சென்னைக்கு வாய்ப்பு IPL கிரிக்கெட்

26-05-2008 ல் நடைபெற்ற மும்பை மற்றும் இராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான IPL கிரிக்கெட் ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றிக்குத் தேவையான ரன்னை அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பின் முதல் கட்டத்தை மும்பை அணி இழந்துள்ளது. ஆனாலும் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூருவை வெற்றி பெற்றால் அரை இறுதிக்குள் செல்லும் அணிகளுக்கான போட்டியில் இருக்கும்.

இன்று நடைபெற்ற IPL கிரிக்கெட்டின் 53 வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஜெயசூர்யா 38 ரன்களும், டெண்டுல்கர் 30 ரன்களும், டகவாலே 8 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் சொகைல் தன்வீர் 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
146 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் பெர்னாண்டோ வீசிய கடைசி ஓவரில் படேல் மற்றும் ஜடேஜா ஜோடி இணைந்து 15 ரன்களை எடுத்தது. சொகைல் தன்வீர் ஆட்டநாயகனாகவும், அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார்.



நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி ஹைதராபாத் அணியை தோற்கடித்தால் சென்னை அணி அரைறுதிக்கு தகுதி பெறும். இல்லையெனில் மும்பை பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக காக்க வேண்டி வரும். அதில் மும்பை வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அரை இறுதிக்கு தகுதி பெறும்.

சிக்கலில் சென்னை அணி - அரை இறுதிக்கு தகுதி பெறுமா? IPL கிரிக்கெட்

IPL கிரிக்கெட்டின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை அணி தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் நூலிலையில் தோல்விகளைத் தழுவியதால் அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது. சென்னை அணி நாளை நடைபெறும் ஹைதராபாத்திற்கு இடையேயான தனது கடைசி ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி தனது மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். மும்பை அணிக்கு பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஏதாவது ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்று சென்னை அணி தோற்றிருந்தால் மும்பை அணி ரன் விகித அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். மும்பை அணியின் ரன் விகிதம் +0.590 என்று நல்ல நிலையில் உள்ளது. ஆனால் சென்னை அணியின் ரன் விகிதம் -0.241 என்று பரிதாபகரமாக உள்ளது. இனி வரக்கூடிய மூன்று நாட்களின் முடிவுகளும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப் படுகின்றன.



நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் பெங்களூரு அணி ஹைதராபாத்தையும், கொல்கத்தா அணி மொகாலி அணியையும் தோற்க்கடித்தத



மொகாலி அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா யுவ்ராஜூடன்



அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 52 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Saturday, May 24, 2008

மார்ஷின் மந்திரம் தொடர்கின்றது - மொகாலி வெற்றி - IPL கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் மற்றும் சங்ககாராவின் அபார ஆட்டத்தால் மொகாலி அணி தனது ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்தது. ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நடைபெற்ற போட்டியில் யுவராஜ்சிங் தலைமையிலான மொகாலி அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான
ஹைதராபாத் அணியும் மோதியதில்
மொகாலி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொகாலி அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கில்கிரிஸ்ட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தலா 50 ரன்கள் எடுத்தனர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மொகாலி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்ஷ் 60 ரன்களும், சங்ககாரா 25 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர்.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 48 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

Friday, May 23, 2008

இலவச கொத்தனாருக்கு படம் காட்டப் போறோம்

சமீபத்தில் கிரிக்கெட் ரசிகனின் ஒரு பதிவில் மும்பை அணியின் ஒருதலைபட்சமான ஆட்ட ரசிப்பை பற்றி யுவராஜ் சிங்கின் விரக்தியான பேச்சு பற்றி பதிவு வந்தது. கிரிக்கெட்டில் எந்த அணி ஆடினாலும் சிறப்பாக செயல்படும் போது அதை பாராட்டுவதும், ரசித்து ஆரவாரம் செய்வதும் உண்மையான ரசிகர்களுக்கான பண்பாடு. அருகில் உள்ள மாநிலத்தின் அணி, அதில் விளையாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய அணியைச் சார்ந்தவர்கள் என்னும் நிலையில், கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்காமல், தங்களது அணிக்கு மட்டுமே ஒருதலை சார்பாக ஆதரவளித்தது வருத்தப்பட வேண்டியது தான்.

இந்த விடயத்தில் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்பதற்கே இந்த படக்காட்சி. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் எதிரான ஆட்டம் என்பது ஒரு போர்க்களம் போல தான் இருக்கும். ஆனால் சென்னையில் மட்டும் அது வேறுபடும். சையத் அன்வர் உலக சாதனை நிகழ்த்திய (194 ரன்கள்) அந்த சாதனையை சென்னை மக்கள் எப்படி பாராட்டினார்கள் என்பதையும், அதை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்த அன்வரையும் இந்த படக்காட்சியில் காணுங்கள். (இரண்டு நிமிடத்திற்கும் குறைவானதே)



டிஸ்கி : தலைப்பு சும்மா லுலுலுவா. சென்ஷி மட்டும் தான் கொத்ஸை வைத்து தலைப்பு வைப்பாரா? நாங்கள் வைக்க மாட்டமா? :))))))))