13-05-2008 அன்று நடைபெற்ற IPl கிரிக்கெட்டின் 35 வது ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அனியும் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சல்மான் பட் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியில் முதல் முறையாக களம் கண்ட சொயிப் அக்தர் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். சுக்லா கடைசி நேரத்தில் 6 ரன் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். சொயிப் அக்தர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 35 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.
திரைப் படப் பாடல்கள் 3Gp யில்
Tuesday, May 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment