Thursday, June 26, 2008

சேவாக் சதம் - பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 299 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சொயிப் மாலிக் 125 ரன்களும், யூனுஸ் கான் 59 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 300 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடத்துவங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. கம்பீர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து வந்து சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடினார். அதே போல் சேவாக்கும் சிறிது நேரத்தில் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். ரெய்னா 84 ரன்களில் ஆட்டம் இழந்தார். சேவாக் அபாரமாக ஆடி 80 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். அவர் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டிய யுவராஜ் சிங் 48 ரன்கள் எடுத்தார். இந்திய தனது 42.1 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணியை அமீரக அணி எதிர் கொண்டது. அதில் இலங்கை அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அனியின் மெண்டிஸ் அபாரமாக பந்து வீசி 22 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இலங்கை 290/9 50 ஓவரில்
யு.ஏ.இ 148/10 36.3 ஓவரில்

Wednesday, June 25, 2008

தோனி, ரெய்னா சதம் இந்தியா வெற்றி! ஆசிய கோப்பை கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்கங்கை எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக் மற்றும் கம்பீர் அபாரமாக ஆடி முறையே 78, மற்றும் 51 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த தோனியும், ரெய்னாவும் ரன்களை மிக விரைவாக குவித்தனர். தோனி 96 பந்துகளில் 109* ரன்களும், ரெய்னா 68 பந்துகளில் 101 ரன்களும் குவித்தனர். 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்திருந்தது.





இதனைத் தொடர்ந்து 375 ரன்களை வெற்றி இழக்காக கொண்டு ஆடத்துவங்கிய ஹாங்காங் அணியின் விக்கெட்டுகள் சீராக விழுந்து கொண்டே இருந்தன. அந்த அணி 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சாவ்லா 4 விக்கெட்களையும், சேவாக் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொள்கின்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா - ஹாங்காங் இன்று மோதல்

பாகிஸ்தானின் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் ஆட்டங்கள் நேற்று துவங்கின. முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் - ஹாங்காங்கை எதிர்த்தும், பங்களாதேஷ் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்தும் ஆடின.
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் விளையாடியது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 288 ரன் எடுத்தது. யூனுஸ் கான் 67 ரன்களும், பவாத் ஆலம் 63 ரன்களும், சொகைல் தன்வீர் 59 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து விளையாட தொடங்கிய ஹாங்காங் அணி, 37.2 ஓவரில் அனைத்-து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன் எடுத்தது. இதன்படி பாகிஸ்தான் 155 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேஷமும்,
வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் மோதின. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அனியின் அஷ்ரபுல் 109 ரன்களும், ரபிக்குல் ஹசன் 83 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன் எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 96 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் குர்ராம் கான் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். வங்கதேச தரப்பில் அப்துர் ரசாக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியா ஹாங்காங்கையும், இலங்கை வங்காளதேசத்தையும் எதிர்கொள்கின்றது

Tuesday, June 10, 2008

பாக் - இந்திய கிரிக்கெட் - இந்தியா சாதனை வெற்றி

மிர்பூர் : வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின .டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. சேவாக் அதிகபட்சமாக 89 ரன்களும், கம்பீர் 62 ரன்களும், யுவராஜ் சிங் 55 ரன்களும் எடுத்தனர். சேவாக்கும், கம்பீரும் ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 21 ஓவரில் 155 ரன்கள் எடுத்தனர் . பாக் தரப்பில் உமர் குல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 331 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. பிரவீன் குமாரின் அபார பந்து வீச்சில் அதன் விக்கெட்கள் சரிந்தன. மாலிக் மட்டும் அரை சதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சேவாக் தட்டிச் சென்றார். இதன் மூலம் முத்தரப்பு கிரிக்கெட்டின் இறுதியில் இந்தியா மோத உள்ளது.




இந்தியாவின் சாதனை

1.பாகிஸ்தான் அணி கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று வைத்திருந்த சாதனையை இந்தியா இன்று முறியடித்துள்ளது.

2. பாகிஸ்தானை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது இந்திய அணிக்கு இதுவே முதல் முறை. இதற்கு முன் 2005 ல் 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தான் சாதனையாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவை 2005 ல் 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையைக் கொண்டுள்ளது.

Sunday, June 8, 2008

முத்தரப்பு கிரிக்கெட் - பாக் - பங்களாதேஷ் இன்று மோதல்

மிர்பூர்:இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று மிர்பூரில் துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசஅணிகள் மோதுகின்றன. தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற உறுதியுடன் பாகிஸ்தானும், சொந்த மண்ணில் விளையாடும் உற்சாகத்தில் வங்கதேசமும் களமிறங்குகின்றன.

வங்கதேசத்தின் மிர்பூரில் இந்தியா, பாகிஸ் தான், வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மட்டுமே மோதும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் அதிகமுக்கியத்துவம் பெறுகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி சமீபகாலமாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் 2006 உலக கோப்பை தொடரில் பைனலுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைஅணிகளை வீழ்த்தி, அசத்தியது.

இளமையின் எழுச்சி: சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் இளம் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். அனுபவ சச்சின், கங்குலி இல்லாதநிலையில் டில்லி அணிக்கு சூப்பர் துவக்கம் தந்த சேவக், காம்பிர் கூட்டணி ஆட்டத்தை துவக்கலாம். மிடில்ஆர்டரை' பலப்படுத்த ரோகித், ரெய்னா, யுவராஜ், தோனி, உத்தப்பா என வலுவான பேட்டிங் படை தயாராக இருக்கிறது. யூசுப் மற்றும் இர்பான் பதான் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைகொடுப்பார்கள். இஷாந்த், பிரவீண், ஆர்.பி.சிங் என பந்துவீச்சும் பலமாக இருக்கிறது. தடை காரணமாக இடம்பெறாத ஹர்பஜன் இடத்தை நிரப்ப பியூஸ் சாவ்லா, ஓஜா தயாராக இருக்கின்றனர்.

தொடருமா வெற்றிநடை: இந்நிலையில் இன்று நடக்கும் முக்கிய போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணியில் தடை விதிக்கப்பட்ட அக்தர் மற்றும் போதை பொருள் வழக்கில் சிக்கிய ஆசிப் இடம்பெறவில்லை. தொடர்ந்து 11 ஒரு நாள் போட்டிகளில் வென்ற உற்சாகத்தில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. கடைசியாக சொந்த மண்ணில் நடந்த தொடரில் 50 என வங்கதேசத்தை முழுமையாக தோற்கடித்தது.

மிரட்டும் யூ' கூட்டணி: துவக்க வீரர் சல்மான் பட் அணிக்கு நல்ல துவக்கம் அமைத்து தரக்கூடியவர். யூனிஸ்யூசுப் கூட்டணி எதிரணியின் பவுலர்களுக்கு சிக்கல் தரலாம்.மிடில்ஆர்டரில்' ரன்விகிதத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்த அப்ரிதி, மிஸ்பா தயாராக இருக்கின்றனர். விக்கெட் கீப்பர் அக்மலும் ரன் வேட்டைக்கு உதவுவார் என்பதால் வங்கதேச பவுலர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

கவனமாக விளையாடுவோம்: இத்தொடரில் வங்கதேசம் கடும் சவால் தரும் என்பதை மறுக்க முடியாது. தொடரை வெல்வதே எங்கள் குறிக்கோள் என்கிறார் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக். இது குறித்து அவர் கூறுகையில்,வங்கதேச அணி சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும். இதனால் இன்றைய போட்டியில் கவனமாக செயல்படுவோம். முதல் போட்டியில் வென்று, நம்பிக்கையை அதிகரித்து கொள்வோம். நீண்ட காலமாக விளையாடி வருவதால் இங்குள்ள மைதானங்களை பற்றி நன்குஅறிவோம்,'' என்றார்.

தன்வீர் தயார்: அக்தர், ஆசிப் இல்லாதநிலையிலும் பாகிஸ்தான் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய தன்வீர் வேகத்தில் மிரட்ட காத்திருக்கிறார். இவருக்கு உமர் குல் நல்ல ஒத்துழைப்பு தருவார். இப்திகார் ராவ், சோகைல் கான், பவாத் ஆலம் ஆகியோர் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.

அஷ்ரபுல் நம்பிக்கை: வங்கதேசத்தை பொறுத்தவரை எதிரணிக்கு எந்த நேரத்திலும் அதிர்ச்சி தோல்வி தரலாம். என்றாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிடுகிறது. இந்தாண்டு போட்டிகளில் சொல்லிக் கொள்ளும் படி செயல்படவில்லை. சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வெற்றியை விரைவில் பறிகொடுக்காமல் இறுதிவரை போராடி ஆறுதல் அளித்தது. முஷிபூர் ரஹிம் துவக்கத்தில் சிறப்பாக விளையாடுகிறார். மோர்டசா, அப்துர் ரஹிம், சதாகத் ஹீசைன் பந்துவீச்சில் வலு சேர்க்கின்றனர்.பேட்டிங்கில் கேப்டன் அஷ்ரபுல்லை அதிகம் சார்ந்துள்ளது. இவர் ஜொலித்தால் மட்டுமே எதிரணிக்கு சவால் தரும் இலக்கை எட்ட முடியும் என்ற நிலையில் இருக்கிறது.

சிறந்த பாடம்: அஷ்ரபுல்வங்கதேச கேப்டன் அஷ்ரபுல் கூறுகையில்,பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். முத்தரப்பு தொடர் சிறந்த பாடமாக அமையும். கடந்த கால தோல்விகளில் இருந்து தவறை திருத்திக்கொண்டு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். எனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறேன். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், அதிர ரன்கள் குவிக்க முடியவில்லை. சொந்த மண்ணில் விளையாட இருப்பதால், வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். எதிரணியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம். இந்த யுக்திகளை வெளிப்படையாக கூற விரும்பவில்லை,''என்றார்.

Courtesy : Dinamalar

Sunday, June 1, 2008

சென்னைக்கு இரண்டாமிடம் - IPL கிரிக்கெட் இராஜஸ்தான் சாம்பியன்

கடந்த இரண்டு மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த IPL கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இராஜஸ்தான் அணி சென்னை அணியை வென்று IPL சாம்பியன்ஷிப்பின் முதல் கோப்பையை வென்றது. கடந்த ஏப்ரல் 18 ந்தேதி முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இந்தியாவில் உள்ள 8 அணிகளைக் கொண்டு Twnety 20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை, ஜெய்ப்பூர், மொகாலி, டெல்லி,கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் பலகட்டங்களாக மோதின. இதில் சென்னை மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜஸ்தான் ராயல் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இன்று நடந்த (ஜூன் 1) இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜெய்ப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்ந்த்தெடுத்தது. சென்னை அணியின் சார்பில் வித்யுத் சிவராமகிருஷ்ணனும், பார்த்திவ் பட்டேலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வித்யுத் 16 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா சிறப்பாக ஆடினார். பட்டேல் 38 ரன்னிலும், ரெய்னா 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மோர்க்கல் 16 ரன்களும், தோனி 29* ரன்களும் எடுத்தனர். ஜெய்ப்பூர் தரப்பில் யூசுப் பதான் முக்கிய தருணங்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி சென்னையின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினார். 20 ஓவரில் இறுதியில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 164 ரன்கள் என்ற வெற்றி இழக்கை கொண்டு ஆடத்துவங்கிய இராஜஸ்தான் அணியின் பட்டேலால் நல்ல துவக்கத்தைத் தர இயலவில்லை. அவர் 11 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து கோனி பந்தில் ஆட்டமிழந்தார். அதை அடுத்து வந்த கம்ரான் அக்மலும் விரைவில் ரன் அவுட் ஆகினார். அஸ்னோத்கர் 20 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து வந்த வாட்சனும் யூசுப் பதானும் இராஜஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். வாட்சன் 28 ரன்களில் அவுட்டானார். இதை அடுத்த வந்த கைப் 11 ரன்னிலும், ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக ஆட்டமிழந்தனர். மற்றொரு முனையில் யூசுப் பதான் அதிரடியாக ஆடினார். அவரும் 56 ரன்களில் இரண்டு ஓவரில் 18 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. 19 வது வீசிய நிடினி 10 ரன்கள் அடிக்கப்பட கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பாலாஜி வீசினார். அதன் கடைசி பந்தில் வெற்றிக்கான ரன்னை சொகைல் தன்வீர் அடித்து இராஜஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.


ஆட்ட நாயகன் யூசுப் பதான்





அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி சாம்பியன் பட்டதை வென்றது. சென்னை அணி இங்கும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கும்மி XI மூன்றாம் இடத்தையும், இம்சையின் திருச்சி நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற நெல்லை அணிக்கு வாழ்த்துக்கள்

சொதப்பிய அரை இறுதிகள் - இறுதியில் சென்னை - இராஜஸ்தான் இன்று மோதல் - IPL கிரிக்கெட்


மகிழ்ச்சியில் சென்னை அணியினர்
ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றது. மும்பையில் நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை, ராஜஸ்தான் அணி அபாரமாக ஆடி வீழ்த்தியது. மிகவும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் முழுவதும் ஒரு சார்பாக இருந்தது.
இந்திலையில் IPL கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதியில் சென்னை மற்றும் பஞ்சாப் மொகாலி அணிகள் மோதின. இதில்
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரமேஷ் பவார் அதிகபட்சமாக 28* ரன்கள் எடுத்தார். நிடினி, கோனி மற்றும் மொர்கெல் தலா 2 விக்கெட்டுகளையும், முரளிதரன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றநிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரைய்னா மற்றும் பார்ட்தீவ் பட்டேல் இருவரும் அரை சதம் அடித்தனர். இந்த ஆட்டம் முழுவதும் சென்னை அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தின் நாயகன் விருது நிடினிக்கு வழங்கப்பட்டது.


ஆட்ட நாயகன் நிடினி


தனது அணியின் தோல்வியால் கவலையில் பிரீத்தி ஜிந்தா
இந்நிலையில் இறுதிப் போட்டி மும்பையில் இன்று இரவு நடக்கின்றது. இதில் சென்னை அணியும், இராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் பரபரப்பாக இருக்கும் என்று நம்பலாம்.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்கு முன் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.