Friday, May 23, 2008

மழையால் கொல்கத்தா முழுமையாக வெளியேறியது - IPL கிரிக்கெட்

IPL கிரிக்கெட்டில் இன்று நடைபெறுவதாய் இருந்த கொல்கத்தா - டெல்லி அணிகளுக்கு இடையேயான T20 ஆட்டம் மழையின் காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் கிடைத்துள்ளது. இதன் மூலம் மொகாலி அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது. கொல்கத்தா அணி முற்றிலுமாக IPL கிரிக்கெட்டின் அரை இறுதியில் இருந்து வெளியேறி விட்டது. டெல்லி அணி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இனி மீதமுள்ள ஆட்டங்களின் முடிவுகள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.




அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 47 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

0 comments: