Saturday, May 10, 2008

09-05-2008 IPL கிரிக்கெட் - ஜெய்ப்பூர் முதலிடம்

ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதியதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ததை தொடர்ந்து, களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஒரு விக்கெட்டை வீழ்த்தி 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த யூசுப் பதான் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் 6 ல் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் அணி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 30 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

0 comments: