Monday, May 26, 2008

சிக்கலில் சென்னை அணி - அரை இறுதிக்கு தகுதி பெறுமா? IPL கிரிக்கெட்

IPL கிரிக்கெட்டின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை அணி தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் நூலிலையில் தோல்விகளைத் தழுவியதால் அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது. சென்னை அணி நாளை நடைபெறும் ஹைதராபாத்திற்கு இடையேயான தனது கடைசி ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி தனது மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். மும்பை அணிக்கு பெங்களூரு மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஏதாவது ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்று சென்னை அணி தோற்றிருந்தால் மும்பை அணி ரன் விகித அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். மும்பை அணியின் ரன் விகிதம் +0.590 என்று நல்ல நிலையில் உள்ளது. ஆனால் சென்னை அணியின் ரன் விகிதம் -0.241 என்று பரிதாபகரமாக உள்ளது. இனி வரக்கூடிய மூன்று நாட்களின் முடிவுகளும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப் படுகின்றன.



நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் பெங்களூரு அணி ஹைதராபாத்தையும், கொல்கத்தா அணி மொகாலி அணியையும் தோற்க்கடித்தத



மொகாலி அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா யுவ்ராஜூடன்



அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 52 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி மூன்றாம் இடத்தையும், இம்சையின் கும்மி XI நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன.

0 comments: