வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பெங்களூரு அணியினர்
மொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மொகாலியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கங்குலியின் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடியதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. 24 ரன்கள் எடுத்ததுடன், அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்களையும் வீழ்த்திய இர்பான் பதான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் 22 ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றது. அதை தொடர்ந்து பல நாட்களாக இரண்டாவது இடத்தை பெற்று வந்த மதுரை அணியை வீழ்த்தி திருச்சி அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை மூன்றால் இடத்தையும், மதுரை நான்காம் இடத்தையும் சில புள்ளிகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளன.
22 ஆட்டங்களின் முடிவில் தமிழ் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு
0 comments:
Post a Comment