Tuesday, May 27, 2008

சென்னை கலக்கல் - அரை இறுதிக்குத் தகுதி - IPL கிரிக்கெட்

இன்று நடைபெற்ற ஹைதராபாத்துக்கு இடையேயான தனது கடைசி ஆட்டத்தில் வென்றதன் மூலம் சென்னை அணி IPL கிரிக்கெட்டின் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரை இறுதியில் சென்னை அணி பஞ்சாப் மொகாலி அணியை எதிர் கொள்ள உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வரும் IPL கிரிக்கெட் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ளன. அரை இறுதிக்கு இராஜஸ்தான் மற்றும் மொகாலி அணிகள் சுலபமாக வெற்றி பெற்ற நிலையில் நேற்றைய மும்பை அணியின் தோல்வி டெல்லியை அரை இறுதிக்குள் எடுத்துச் சென்றது. கடைசியாக நான்காவது அணிக்கு சென்னை மற்றும் மும்பை அணிகள் போட்டியில் இருந்தன. இந்நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று முக்கிய போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வேணு கோபால் ராவ் 46 ரன்களும், தேஜா 40 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் பாலாஜி மற்றும் மோர்க்கல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.



இதைத் தொடர்ந்து 148 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் துவங்கிய சென்னை அணி 19.2 ஓவரில் 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் ரெய்னா 54 ரன்களும். தோனி 25 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். இனி லீக் ஆட்டங்களில் உள்ள 2 ஆட்டங்களின் முடிவுகளும் அரை இறுதியில் விளையாடப் போகும் அணிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்கி : 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்த ஹைதராபாத் அணியின் ரவி தேஜாவின் நல்ல படம் கிடைக்காததால் தேஜாஸ்ரீ யின் படம் போட்டுள்ளோம். ரசிகர்கள் ‘பொறுத்துக்' கொள்ளவும்.

0 comments: