Friday, May 30, 2008

ஐ.பி.எல் கிரிக்கெட் - முதல் அரையிறுதி போட்டி : ராஜஸ்தான்-டில்லி அணிகள் மோதல்


கடந்த ஒன்றரை மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களை தொலைக்காட்சி முன் கட்டிப் போட்ட ஐ.பி.எல்., தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் மோதிய இத்தொடரின் அரையிறுதிப்போட்டியில் விளையாட சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டில்லி அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் விளையாடவிருக்கும் அணிகள் இன்று ( 30-05-08) மற்றும் நாளை (31-05-08) நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டிகள் மூலம் தகுதி பெறவுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டி இன்று ராஜஸ்தான் அணிக்கும், டில்லி அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி சென்னை அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் புடையே நடைபெறுகிறது. தொடரின் 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டிகளில் வெறி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த 2 அரையிறுதிப்போட்டிகளில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது என்பதை நம்பலாம்.

0 comments: