Wednesday, April 2, 2008

ICC மீண்டும் சிக்கல்- தலைவர் பதவியில் இருந்து படேல் விலகல்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிரதான அலுவலராக பதவியேற்க விருப்பமில்லை என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளர் ஐ.எஸ் பிந்த்ரா தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிரதான அலுவலராக மால்கம் ஸ்பீடு இருந்து வருகிறார். இவருடைய ஏழு ஆண்டு பதவி காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதனால் சமீபத்தில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர்மட்ட குழு கூட்டத்தில், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இம்தியாஸ் படேல் , ஐ.எஸ் பிந்த்ரா இருவரின் பெயர் ஐ.சி.சி பிரதான அலுவலர் பதவிக்காக பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் தென் ஆப்ரிக்கவை சேர்ந்த இம்தியாஸ் படேல் இந்த பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.எஸ் பிந்த்ராவுக்கு ஐ.சி.சி அமைப்பின் முதன்மை ஆலோசகராக பதவி அளிக்கப்பட்டது. ஆனால் இம்தியாஸ் படேல் ஐ.சி.சி பிரதான அலுவலர் பதவியில் விருப்பம் இல்லை என்று ஐ.சி.சி அமைப்பிடம் தெரிவித்துவிட்டார். அடுத்து ஐ.எஸ் பிந்த்ராவுக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பிந்த்ரா ஐ.சி.சி முதன்மை அலுவலர் பதவியில் தொடர விரும்புவதாகவும், சொந்த வேலை காரணமாக புதிய பதவி பொறுப்பேற்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஐ.சி.சி உயர்மட்ட குழு புதிய பிரதான அலுவலரை தேர்ந்தெடுக்க மறுபடியும் கூட உள்ளது

நீங்களும் பங்கு கொள்ளுங்கள் எய்ட்ஸ் நலநிதி கிரிக்கெட் போட்டி

0 comments: