Saturday, April 26, 2008

ஹர்பஜன் சிங் பளார்., பளார்., கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீசாந்த்

மொகாலி : கிங்ஸ் ஆப் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்சுக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங், எதிரணி வீரரான ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



மொகாலியில் கிங்ஸ் ஆப் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்சுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான கிங்ஸ் ஆப் லெவன் பஞ்சாப் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி யை கொண்டாடும் இனிய தருணத்தில் உற்சாகத் துள்ளல் போட்ட ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் அறைந்தார் ஹர்பஜன் சிங் இதனை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசாந்த் , அந்த இடத்திலேயே அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். இதன்பின் இந்த செயலுக்கு ஸ்ரீசாந்திடம் ஹர்பஜன் சிங் மனிப்பு கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Now harbhajan singh proof hayden comments. Yes he was a MAD BOY.
by arivazhagan,Singapore



பொதுஇடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் வெற்றியோ தோல்வியோ ஒரு நல்ல விளையாட்டாளன் தனது உணர்வுகளை வெளியே காட்டாமல் சாதாரணமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாத இவர்களை கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இவர்கள் விளையாட்டளர்கள் அல்ல. வியாபாரிகள்!
by அக்னிபுத்திரன்,India

செய்தி : தினமலர்

4 comments:

said...

என்னத்த சொல்ல எல்லாம் நேரம்

said...

ஆமாம், அவன் அடித்ததை விட நம்ம சின்ன பையன் தேம்பி தேம்பி அழுதது பார்க்க பாவமா இருந்துச்சு! என்ன இது கொஞ்சமும்ம் நாகரீகம் இல்லாமல் இப்படி! ஹர்பஜனை நீக்க வேண்டும்!

செம கடுப்புடன்
அபிஅப்பா

said...

ஹர்பஜான் கொஞ்சம் உரமான ஆள்போலதான் இருக்கு. இப்படியா நாகரீகமில்லாமல்... சீ.. சீ..!

Anonymous said...

பள்ளிகோடத்துப் புள்ளைங்க தேவலாம். கருமம் கருமம்