Tuesday, April 22, 2008

21-04-08 - IPL தமிழ் கிரிக்கெட் - நெல்லை மீண்டும் முன்னிலை

21-04-2008 அன்று நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியும், மொகாலியும் மோதின. முதலில் பேட் செய்த மொகாலி அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மொகாலி அணியின் கேப்டன் வார்னே அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். மொகாலி அணியின் யுவராஜ் சிங் 57 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வாட்சன் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.


ராஜஸ்தான் அணி தொடர்ந்து தனது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


அதே நேரத்தில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நான்காவது நாட்களின் ஆட்டங்களின் முடிவில் நேற்று முன்னிலையில் இருந்த மதுரை அணியை பின்னுக்கு தள்ளி நெல்லை அணி முதல் இடத்தை மீண்டும் பிடித்து விட்டது.

0 comments: