Sunday, April 20, 2008

19-04-2008 IPL தமிழ் கிரிக்கெட் நெல்லை முன்னிலை

19-04-2008 அன்று IPL ல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சென்னை அணியும், மொகாலி அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் டோனி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹச்சி 54 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து ஆடிய மொகாலி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இரண்டாவது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியும், டெல்லி அணியும் மோதியது. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.





மூன்று ஆட்டங்களின் முடிவில் நமது தமிழ் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி தொடர்ந்து முன்னிலை வைக்கிறது.




மேல் விபரங்களுக்கு முழு ஸ்கோர் போர்டு

1 comments:

said...

நெல்லை அணிக்கு வாழ்த்துக்கள்.