Monday, April 7, 2008

2011 உலக கோப்பையில் விளையாட விரும்புகிறேன் : சச்சின்

ஏறக்குறைய 20 ஆண்டுகாலமாக கிரிக்கெட்டில் கோலோச்சிய நிலையிலுள்ள இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், 2011-ல் நடைபெறவுள்ள உலக கோப்பையில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன்மூலம், உலக கோப்பையை வெல்லும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிட்டும் என்று தாம் நம்புவதாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1986-ல் தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சச்சினிடம், தனது காலக்கட்டத்தில் இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.

தனது உலக கோப்பை கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கைக் கொண்டிருக்கும் அவர், 2011-ல் நடைபெறவுள்ள உலக கோப்பையில் விளையாடுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும், இடைவெளி நீண்டதூரமாக இருப்பினும் அதைக் கருத்தில்கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது ஆட்டத்தை ரசித்துணர்ந்து விளையாடுவதாக குறிப்பிடும் டெண்டுல்கர், அடுத்த உலக கோப்பையில் விளையாடினால், மொத்தம் ஆறு உலக கோப்பைகளில் தொடர்ந்து விளையாடிய பெருமையைப் பெறுவார்.


சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, சமூக சேவை மற்றும் கிரிக்கெட் சார்ந்த பணிகளை தொடரவுள்ளதாக சச்சின் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)


நீங்களும் பங்கு கொள்ளுங்கள் எய்ட்ஸ் நலநிதி கிரிக்கெட் போட்டி

0 comments: