Wednesday, April 2, 2008

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு: 5 ஆண்டு விளையாட தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு 5 ஆண்டுகள் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தடை விதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு சக நாட்டு வீரரான முகமது ஆசிப்பை பேட்டால் அடித்தது, வன்முறை மற்றும் உடல் தகுதியன்மை போன்ற பல காரணங்களினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்தார்.


இ‌தனிடை‌‌யே இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்தர் மீதுள்ள குற்றங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விசாரனை நடத்தி வந்தது. இதனிடை‌யே அவருக்கு ஐந்து ஆண்டுகள் விளையாட தடை விதிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் நாசிம் அஸ்ரப் ‌தெரிவித்துள்ளார். இதன்படி அவர் ஐந்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணியில் விளையாட ‌தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதி அளித்துள்ளது.

நீங்களும் பங்கு கொள்ளுங்கள் எய்ட்ஸ் நலநிதி கிரிக்கெட் போட்டி

0 comments: