Wednesday, July 2, 2008

ஒருநாள் கிரிக்கெட் - நியூஸிலாந்து புதிய உலக சாதனை

UPDATE : இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இறுதி போட்டியில் பங்கேற்க நாளைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் நியூஸிலாந்து அணி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இன்று நியூஸிலாந்துக்கும் அயர்லாந்து அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அபாரமாக 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 402 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் மார்ஷல் 161 ரன்களும் மெக்கல்லம் 166 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 29 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதற்கு முன் இந்திய அணியின் 257 ரன்கள் வித்தியாசமே அதிகபடசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments: