Saturday, July 26, 2008

இந்தியா இலங்கையிடம் இன்னிங்ஸ் & 239 ரன்களில் தோல்வி

கொழும்பு: கொழும்பு டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொழும்புவில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 600 ரன்கள் குவித்து இலங்கை ஆட்டத்தை டிக்ளர் செய்தது.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு வெறும் 159 ரன்கள் எடுத்திருந்தது. "பாலோ ஆன்' தவிர்க்க 242 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் நான்காவது நாள் களமிறங்கிய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்து, "பாலோ ஆன்' ஆனது. 377 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை வீரர் முரளிதரன் பந்து வீச்சில் துவக்க வீரர் சேவக்(13) விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் இரண்டு இன்னிங்சிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

செய்தி : தினமலர்

1 comments:

said...

ரொம்ப நாளே பதிவே காணுமே...