இதனைதொடர்ந்து 259 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 46.3 ஓவரில் 212 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் ஜெயசூர்யா 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஹர்பஜன் 3 விக்கெட்களையும், முனாப் பட்டேல், யுவராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், இதனையடுத்து இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஐடியா கோப்பை ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.

இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாஸ் சாதனை
இன்றைய போட்டியில் யுவராஜ் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியின் சமிந்தா வாஸ் 400 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.
1 comments:
அப்படியா??
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு
Post a Comment