Friday, August 15, 2008

யுவராஜ் சிங் 172 ரன்கள் - இந்திய அணி வெற்றி

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே வரும் ஆகஸ்ட் 18 ந்தேதி ஒருநாள் ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இன்று இலங்கை XI அணிக்கு இந்திய அணிக்கும் மாதிரி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்திய அணி தனது முழு வீரர்களுடன் களம் இறங்கியது. இலங்கை அணியில் தரங்கா, வர்ண்பூரா, கபூகேதரா, சமரா சில்வா ஆகிய முக்கிய வீரர்கள் ஆடினர்.

டாள் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் சார்பில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 121 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். இதில் 13 சிக்சர்களும், 8 போரும் அடங்கும். இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 250 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முபாரக் 60 ரன்களும், தரங்கா 50 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என நம்பலாம்.

0 comments: