Sunday, August 24, 2008

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையேயான 3-வது ஒரு நாள் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50ஓவரில் 237 ரன் எடுத்தது. இந்திய அணியின் ரெய்னா 53 ரன்களும், தோனி 76 ரன்களும் எடுத்தனர். மெண்டீஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 238 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாட தொடங்கிய இலங்கை அணி 49 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் ஜெயவர்த்தனா 94 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஜாகீர் கான், முனாப் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், இதனையடுத்து இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.




இந்திய அணியின் தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 comments:

said...

சுடச்சுட சூப்பர் செய்தி.. நன்றி :)