Sunday, August 3, 2008

இங்கி. கிரிக்கெட்டில் பரபரப்பு - வாகன், காலிங்வுட் ராஜினாமா

இங்கிலாந்து அணியில் டெஸ்ட் கேப்டனும், ஒருநாள் கேப்டனும் ஒரே நாளில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தோல்விகளுக்கு பொறுப்பேற்று அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.




அதே போல் ஒருநாள் போட்டிகளில் காலிங்வுட் கேப்டனாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு இடையேயான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது. இதனாலும், தனது ஆட்டத்திறன் கேப்டன் பொறுப்பால் பாதிக்கப்படுவதாகவும் கூறி காலிங்வுட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஒரே நாளில் இரண்டு கேப்டன்களும் ராஜினாமா செய்தது இங்கிலாந்து கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் இன்னும் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடைசிப் போட்டி வரும் 7 ம்தேதி தொடங்குகின்றது. அந்த போட்டிக்கு பீட்டர்சன் தலைமை வகிப்பார் என்று தெரிகின்றது.

0 comments: