Thursday, October 16, 2008

கும்ப்ளேவுக்கு நெருக்கடி முற்றுகின்றது! பாண்டிங், வெங்கச்கர் தாக்கு!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரூவில் நடந்தது. இந்த ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் ஜொலிக்காத போதும் கடைசி நிலை வீரர்கள் கண்ணியமான ஸ்கோரை எட்ட உதவினார்.அதே நேரத்தில் பெளலிங் பிரிவில் இரண்டு அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அணியின் கேப்டனும், சுழப்பந்து வீச்சாளருமான கும்ப்ளே இந்த டெஸ்ட்டில் 51 ஓவர்கள் பந்து வீசியும் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற இயலாமல் வெறும் கையுடன் திரும்பினார். இரண்டாம் இன்னிங்ஸில் தோல்பட்டை வலி காரணாமாக 8 ஓவர் மட்டுமே வீச முடிந்தது.



இந்நிலையில் திலிப் வெங்கச்கர் கும்ப்ளே டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்பே தனது உடல் தகுதி சரியில்லையெனக் கூறி ஆட்டத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மீடியாக்களும் 59 ஓவர் வீசி ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற இயலாததைக் குறை கூறியுள்ளன. ஆஸி கேப்டன் பாண்டிங்கும் கும்ப்ளேவின் பந்து வீச்சி சிறப்பானதாக இல்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இது போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கும்ப்ளே பெங்களூரு டெஸ்ட்டில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லையென்றும், 600 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய பிட்சில் ஆசியை 430 ரன்களுக்குள் சுருட்டியதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் தொடர் நட்ந்து கொண்டி இருக்கும் சூழலில் இது போன்றவைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

- கிரிக்கெட் ரசிகன்

0 comments: