Thursday, October 9, 2008

நியூஸிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்

பங்களாதேஷில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இன்று மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி நியூஸிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.



முதலில் பேட் செய்த நியூ அணி 50 ஓவரில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஓரம் 57 ரன்களும், வெட்டோரி 30 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷின் முர்தாசா 4 விக்கெட்களையும், ரசாக் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 45.3 ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பங்களாதேஷின் ஜூனைத் சித்திக் 85 ரன்களும், அஷ்ரபுல் 50* ரன்களும் எடுத்தனர்.



2007 உலகக் கோப்பைக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை பங்களாதேஷ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் முதன் முறையாக மூன்றாம் பவர் பிளேயை பேட்டிங் அணியே தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. இதில் நியூசிலாந்து அணி 34 முதல் 38 வரை எடுத்து வந்தது. அதில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் அணி 39 வது ஓவர் முதல் பவர் பிளேயை பயன்படுத்தியது.

1 comments:

said...

எதோ ஒரு மேட்சில் வெற்றி பெருவது எல்லாம் ஒரு வெற்றியா?

இது எனது புதிய பதிவு...வருகைதாருங்கள்
http://paakeypa.blogspot.com/