Sunday, November 2, 2008

முக்கிய செய்தி : ஓய்வை அறிவித்தார் கும்ப்ளே!

இந்தியா டெஸ்ட் அணியின் கேப்டனும், சுழல்பந்துவீச்சாளருமான அனில் கும்ப்ளே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய கும்ப்ளே
இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

இந்தியாவுக்காக 18 வருடங்கள் ஆடியுள்ள கும்ப்ளே டெஸ்ட்
போட்டிகளில் 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுடனான ஒரு ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய சாதனையையும் கும்ப்ளே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சாதனைகள் பல படைத்து விடை பெறும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துக்கள்!

0 comments: