Monday, March 31, 2008

எய்ட்ஸ் நலநிதிக் கிரிக்கெட் போட்டி - அறிவிப்பு

இது ஒரு வித்தியாசமான கிரிக்கெட் போட்டி. உங்களது வேலை 11 பேர் கொண்ட ஒரு கிரிக்கெட் அணியை அறிவிக்க வேண்டியது மட்டுமே. அதன் பின் ஹாயாக அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க வேண்டியது தான். ஒரு பைசாவும் செலவு இல்லாமல் ஒரு அணியை வாங்கி ஆடவிடக் கூடிய ஆட்டம். ஏப்ரல் 18 முதல் சூன் 1 வரை நடைபெறும் IPL முடிவுகளைப் பொறுத்து இந்த போட்டியின் முடிவு அமையும். உங்களது அணியை எதிர்த்து ஆட இருப்பது நமது சக பதிவரின் அணியே!

அணியைத் தேர்ந்தெடுக்கும் முறை

1. ஒவ்வொரு பங்கேற்பாளரும் தனது சார்பாக IPL கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களில் 11 பேர் கொண்ட அணியை தெரிவிக்க வேண்டும்.
2. 8 அணியில் இருந்தும் நாங்கள் தரும் பட்டியலில் இருந்து 4 மட்டையாளர்களையும், 4 பந்துவீச்சாளர்களையும், 2 ஆல்-ரவுண்டர்களையும் 1 விக்கெட் காப்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். (பட்டியல இங்கே)
3. 5 மட்டையாளர் 3 பந்து வீச்சாளர் போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
4. தத்தமது அணிக்கு ஒரு தமிழ் பெயரையும் சூட்டலாம். அது உங்களது பெயராகக் கூட இருக்கலாம்.
5. 11 பேரில் இருந்து ஒருவரை அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்
6. ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர்களையோ, அல்லது கலந்தோ தேர்ந்தெடுக்கலாம்.

வெற்றி பெறும் முறை
1.ஏப்ரல் 18 முதல் சூன் 1 வரை நடைபெறும் IPL ஆட்டங்களில் வீரர்கள் எடுக்கும் ஸ்கோரை வைத்து மதிப்பெண்கள் இடப்படும்.
2. ஒரு ரன்னுக்கு ஒரு மதிப்பெண்ணும், ஒரு விக்கெட்டிற்கு 20 மதிப்பெணும், ஒரு கேட்சிற்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
3. விக்கெட் காப்பாளருக்கு ஸ்டெம்பிங்குக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
4. ரன் அவுட்டுக்கு மதிப்பெண் கிடையாது
5. அணித்தலைவரின் மதிப்பெணுக்கு இரட்டிப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
( எ.கா : ஒரு ஆட்டத்தில் ஒரு வீரர் 25 ரன் எடுத்து, இரண்டு விக்கெட்டை வீழ்த்தி, இரண்டு கேட்ச்சும் பிடித்திருந்தால் ( 25+(2*20)+(2*5)=) 75 மதிப்பெண் கிடைக்கும். இதே அணித்தலைவருக்கு 150 மதிப்பெண்ணாகி விடும்.)
7. மழை இன்ன பிற காரணங்களால் ஆட்டம் தடை பெற்றால் அதுவரை ஆடப்பெற்ற ஆட்டத்தின் மதிப்பில் மதிப்பெண்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கவனிக்க வேண்டியவை
1. நீங்கள் தமிழில் ப்ளாக் எழுதக் கூடியவர்களாக இருக்க வேண்டும்
2. உங்கள் அணி வெற்றி பெற்றால் பரிசுத் தொகையை எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் பெயரில் வழங்கப்பட்டு ரசீது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விபரம் இங்கே
3. பரிசுத் தொகை முழுவதும் பதிவரின் சொந்த பணமே
4. உங்களது அணியை அறிவிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 15 2008
5. உங்களுடைய 11 வீரர்கள் கொண்ட அணியை உங்கள் பதிவில் இட்டு இங்கு பின்னூட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அல்லது இங்கு பின்னூட்டத்தில் கூட தெரிவிக்கலாம்,
6. ஏப்ரல் 15 வரை அதை மாற்றி அமைத்துக் கொள்ள உங்களுக்கு அவகாசம் உள்ளது.
7. ஏப்ரல் 16 அன்று ஒவ்வொரு அணியின் விபரமும் இங்கு வெளியிடப்படும். அதில் தவறு இருந்தால் ஏப்ரல் 17 க்குள் தெரிவிக்க வேண்டும்.
8. ஏப்ரல் 19 முதல் IPL போட்டியில் வீரர்களின் ஆட்ட முடிவுகளைப் பொறுத்து உங்களது அணிக்கு மதிப்பெண்கள் அளிக்கப் பட்டு இங்கு வெளியிடப்படும்.
7. உங்களது அணியின் ஒரு ஆட்டக்காரர் எந்த காரணத்தினாலோ விளையாடவில்லையென்றால் அதற்குப் பதிலாக வேறொருவரை சேர்க்க இயலாது. எனவே ஏப்ரல் 15 க்கு முன் கவனமாக உங்களது ஆட்டக்காரரைத் தேர்ந்தெடுங்கள்.

ஒரு மாதிரி ஸ்கோர் போர்டு இங்கே


இதே போல் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு இங்கு வெளியாகும். அதிக மதிப்பெண் பெற்ற அணி வெற்றி பெறும். பங்குகொள்ள உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இதைப் படிப்பவர்கள் தங்களது பங்களிப்பைத் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Best of Luck
போட்டியில் உள்ள அணி
1. இம்சையின் கும்மி XI

Tuesday, March 25, 2008

IPL வீரர்கள் பட்டியல்

Bangalore Royal Challengers

Rahul Dravid (c) Abdur Razzak Balachandra Akhil

KP Appanna Jagadeesh Arunkumar Mark Boucher (wk)

Nathan Bracken Shivnarine Chanderpaul Bharat Chipli

Shreevats Goswami (wk) Wasim Jaffer Sunil Joshi

Jacques Kallis Zaheer Khan Virat Kohli

Praveen Kumar Anil Kumble Misbah-ul-Haq

Devraj Patil Dale Steyn Ross Taylor

Vinay Kumar Cameron White

Chennai Super Kings

MS Dhoni (c) Sudeep Tyagi Srikkanth Anirudha

R Ashwin Subramaniam Badrinath Lakshmipathy Balaji

Napoleon Einstein Stephen Fleming Matthew Hayden

Michael Hussey Shadab Jakati Joginder Sharma

Albie Morkel Abhinav Mukund Muttiah Muralitharan

Makhaya Ntini Jacob Oram Parthiv Patel (wk) Suresh Raina

Deccan Chargers Hydrabad

VVS Laxman (c) Halhadar Das (wk) Herschelle Gibbs

Adam Gilchrist (wk) Doddapaneni Kalyankrishna

Pragyan Ojha Dwaraka Ravi Teja Shahid Afridi

Rohit Sharma Chamara Silva Rudra Pratap Singh

Scott Styris Andrew Symonds Chaminda Vaas Venugopal Rao

Paidikalva Vijaykumar Arjun Yadav Nuwan Zoysa

Delhi Daredevils

Virender Sehwag (c) Rajat Bhatia AB de Villiers

Shikhar Dhawan Tillakaratne Dilshan Gautam Gambhir

Brett Geeves Dinesh Karthik Glenn McGrath

Farveez Maharoof Yo Mahesh Mithun Manhas Amit Mishra

Mohammad Asif Pradeep Sangwan Shoaib Malik

Mayank Tehlan Manoj Tiwary Daniel Vettori

Punjab Kings Mohali

Yuvraj Singh (c) Ajitesh Argal Karan Goel

James Hopes Mahela Jayawardene Simon Katich

Uday Kaul Brett Lee Kyle Mills Irfan Pathan

Piyush Chawla Luke Pomersbach Ramesh Powar

Kumar Sangakkara (wk) Ramnaresh Sarwan

Vikram Singh Sreesanth Tanmay Srivastava

Rajasthan Royals Jaipur

Shane Warne (c) Ravindra Jadeja Mohammad Kaif

Kamran Akmal Taruwar Kohli Justin Langer

Dimitri Mascarenhas Morne Morkel Pankaj Singh

Munaf Patel Yusuf Pathan Anup Revandkar

Graeme Smith Sohail Tanvir Shane Watson Younis Khan

Kolkata Knight Riders

Sourav Ganguly (c) Siddarth Kaul Ajit Agarkar

Aakash Chopra Chris Gayle David Hussey

Iqbal Abdulla Murali Kartik Brendon McCullum (wk)

Mohammad Hafeez Ricky Ponting Cheteshwar Pujara

Salman Butt Ishant Sharma Shoaib Akhtar

Tatenda Taibu (wk) Umar Gul

Mumbai Indians

Sachin Tendulkar (c) Loots Bosman Dilhara Fernando

Harbhajan Singh Sanath Jayasuriya Lasith Malinga

Abhishek Nayar Ashish Nehra Manish Pandey

Shaun Pollock Ashwell Prince Ajinkya Rahane

Pinal Shah (wk) Yogesh Vijay Takawale (wk)

Saurabh Tiwary Robin Uthappa

Saturday, March 22, 2008

IPL கிரிக்கெட் - கருணாநிதி, டிராவிட் கருத்து


ஐ.பி.எல் ஏலத்தில் உடன்பாடு இல்லை: கருணாநிதி


சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் விற்பனை செய்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து கருணாநிதி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன். விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறமையை நான் மதிக்கிறேன். ஆனால் இந்திய கிரிக்கெட் போர்டின் சார்பு நிறுவனமான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் விற்பனை செய்ததை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றார்.





வீரர்கள் ஏலம் மறுபடியும் நடக்கக்கூடாது என்கிறார் டிராவிட்

சென்னை:ஐ.பி.எல் நிறுவனம் இப்போது கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் விற்பனை செய்ததை போல மறுபடியும் நடக்கக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார். வேலம்மாள் அறக்கட்டளை கல்வி நிறுவன மாணவர்களிடம் பேசுகையில் டிராவிட் கூறியதாவது: இந்திய கிரிக்கெட் போர்டின் சார்பு நிறுவனமான ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் விற்றதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த செயல் மறுபடியும் நடக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு வீரர்கள் ஒரே அணியாக செயல்படவேண்டும். கிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட புகழுக்காக விளையாடுவதை தவிர்த்து, ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மாணவர்கள் இதே அணி உணர்வை படிப்பில் வெளிக்காட்டவேண்டும். ஒருங்கிணைந்து செயல்படுவதால் சந்தேகத்தை தெளிவுபடுத்தி சிறப்பாக படிக்க முடியும். விளையாட்டில் ஈடுபடுவது தலைமை பண்பை வளர்க்க உதவும். இவ்வாறு டிராவிட் கூறினார்.

செய்தி : தினமலர்

சீனியர்களை சீண்டுகிறார் தோனி!: முன்னாள் வீரர்கள் பாய்ச்சல்

இந்திய அணியில் சீனியர்ஜூனியர் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சீனியர்கள் நீக்கப்பட்டதை கேப்டன் தோனி நியாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு அஜித் வடேகர், பிஷன் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில் சீனியர்களை தேவையில்லாமல் சீண்டுவதாக காட்டமாக கூறியுள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி அசத்தலாக ஆடியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அடுத்து நடந்த டுவென்டி20', முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு சீனியர் வீரர் களான சவுரவ் கங்குலி, டிராவிட், லட்சுமண் போன்றோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். சச்சின் மட்டுமே தப்பினார். இப்படி மூத்த வீரர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டதற்கு ஒரு நாள் அணியின் கேப்டன் தோனி தான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.

முதலில் நடந்த டுவென்டி20' போட்டியில் இளம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. உடனே வீரர்கள் தேர்வு குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஆனால் முத்தரப்பு தொடரில் தோனியின் அணி எழுச்சி கண்டது. முதலிரண்டு பைனல்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது. இது இளமைக்கு கிடைத்த வெற்றி என்று தோனி பெருமிதமாக கூறினார். அப்போது சீனியர் களின் பங்கை மறந்துவிட வேண்டாமென சச்சின் எச்சரித்தார். இந்த பிரச்னை முடிந்து விட்டதாக நினைத்த போது, மீண்டும் சீனியர்களை வம்புக்கு இழுத்துள்ளார் தோனி.


இது குறித்து இவர் அளித்த பேட்டி: ஒரு நாள் போட்டிக்கான அணியில் யார்...யார் இடம் பெற வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந் தேன். எனது விருப்பத்தை தேர்வாளர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் நான் எதிர்பார்த்த அணியை தேர்வு செய்தார்கள். இக்கட்டான நேரத்தில் சீனியர்கள் நீக்கப் பட்டதாக விமர்சித்தார்கள். ஆனால் முத்தரப்பு தொடரில் கோப்பை வென்ற பிறகு, எனது முடிவு சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. விமர்சிப்பவர்கள் அணிக்கு ஆதரவு தருகிறார்களா? அல்லது தனிப்பட்ட சில வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களா? என்று தெரியவில்லை.

மாபெரும் சாதனை: ஒரு கட்டத்தில் இளம் அணியின் திறமை பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பை வென்று சாதித்தோம்.
இனியாவது எங்களது ஆட்டத்தை பாராட்டலாமே? துவக்கத்தில் நடந்த டுவென்டி20' போட்டியில் மிக மோசமாக தோல்வி அடைந்தோம் என்றால்... முத்தரப்பு தொடரில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றோம். வலிமையான ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணில் வைத்து தொடர்ந்து இரண்டு பைனல்களில் வென்றதை மாபெரும் சாதனையாக கருதுகிறேன்.

ஆக்ரோஷ திட்டம்: ஆஸ்திரேலிய அணி, இந்தியா வந்த போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டோம். இதனை ஆஸ்திரேலிய பயணத்திலும் அப்படியே தொடர்வது என முன்கூட்டியே திட்டமிட் டோம். அவர்களுக்கு எதிராக ஒரு இன்ச்' கூட விட்டுக் கொடுக்க கூடாது என முடிவு செய்தோம். இதற்கேற்ப அணியில் உள்ள சில வீரர்கள் வார்த்தை போரில் தாங்களும் சளைத் தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். அதே நேரத்தில் தங்களது கவனம் எவ்விதத்திலும் சிதறாமல் பார்த்துக் கொண் டார்கள். சிலர் அதிகம் பேசாமல் காரியத்தில் மட்டும் கவனமாக இருந்தார்கள்.

வெற்றி தொடரும்: ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றியை மட்டும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அணியின் தரத்தை உயர்த்த வேண்டும். வரும் போட்டிகளிலும் வெற்றிநடையை தொடர வேண்டும். இவ்வாறு தோனி கூறினார். இவரது இந்த பேட்டி தான் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 26ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது.

இதில் முத்தரப்பு தொடரில் நீக்கப்பட்ட டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். இந்த நேரத்தில் சீனியர்களை பற்றி தேவையில்லாமல் தோனி பேசியுள்ளதாக கூறப் படுகிறது. ஒரு நாள் கேப்டன் என்ற முறையில் இவர் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என முன்னாள் இந்திய வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

அஜித் வடேகர்( முன்னாள் கேப்டன்): சீனியர்களின் ஆட்டத்தை பார்த்து வளர்ந் தவர் தான் தோனி. அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக் களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. அணியின் வளர்ச்சியில் மூத்த வீரர்களின் பங்கு மகத்தானது. இதனை வளரும் தலைமுறையினர் புரிந்து கொண்டு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். தோனியின் கருத்துக்களால் சீனியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.



பிஷன் சிங் பேடி(முன்னாள் கேப்டன்): சீனியர்கள் பற்றிய தோனியின் கருத்துக்கள் அணியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கேப்டனாக இவர் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டும். தான் நினைப்பதை வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருப்பதில் தவறு எதுவும் இல்லை என்பதை தோனி புரிந்து கொள்வது மிகவும் அவசியம்..




மன்சூர் அலி கான் பட்டோடி (முன்னாள் கேப்டன்): தோனி போன்ற வீரரிடம் இருந்து இத்தகைய கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை. கேப்டன் தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். தற்போது தான் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். போகப் போக நிதானமாக பேசுவார் என எதிர்பார்க்கலாம்.



கங்குலிக்கு வாய்ப்பு: இதற்கிடையே சீனியர் வீரர்களின் பங்களிப்பை மறந்துவிட வேண்டாமென தேர்வாளர் களை சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சச்சினை மறக்கலாமா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு பைனலில் 34 வயதான சச்சினின் ஆட்டத்தை தோனி மறந்து விட்டாரா? என்று சீனியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பபட்டுள்ளது. சிட்னியில் நடந்த முதல் பைனிலில் 117 ரன் எடுத்து வெற்றிக்கு துணாக நின்றார். பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது பைனலில் 91 ரன் எடுத்தார். இளம் வீரர்களில் காம்பிர் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக பேட் செய்தார். சீனியர், ஜூனியர் இணைந்து தான் வெற்றிக்கு வழி வகுத்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.

பி.சி.சி.ஐ., ஆதரவு: சீனியர்களை விமர்சித்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,கேப்டன் என்ற முறையில் எந்த பிரச்னை பற்றியும் பேசும் உரிமை தோனிக்கு உண்டு. வீரர்களை தேர்வாளர்கள் தான் தேர்வு செய்கிறார்கள். இதில் கேப்டன் தலையிட வாய்ப்பு இல்லை,'' என்றார். செயலர் நிரஞ்சன் ஷா கூறுகையில்,தோனி தெரிவித்த கருத்துக்கள் வேறுவிதமாக வெளியிடப்பட்டிருக்கலாம். இது பற்றி தெளிவாக அறிந்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்,'' என்று கூறி நழுவினார்.

செய்தி : தினமலர்

Monday, March 17, 2008

ICC கிரிக்கெட்டுக்கு புதிய தலைவர் - இம்தியாஸ் பட்டேல்

உலக கிரிக்கெட் கவுன்சிலான ICC க்கு புதிய தலைவராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைவராக இருந்த மால்கம் ஸ்பீட்டின் பதவிக்காலம் முடிவடைந்தைத் தொடர்ந்து புதிய தலைவராக இவர் தேர்ந்தெக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு இந்தியாவைச் சேர்ந்த IS பிந்த்ராவும் போட்டியில் இருந்தார். ஆனாலும் இறுதியில் இம்தியாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

Sunday, March 16, 2008

ஹி!ஹி! இது கிரிக்கெட்டாக்கும் :))

மூன்று இந்தியர்களும் மூன்று பாகிஸ்தானியர்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண மான்செஸ்டருக்குப் புறப்பட்டார்கள். ரயிலில் பயணம் செய்வதாகத் திட்டம். ரயில்வே ஸ்டேசனுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் ஆளுக்கொரு டிக்கெட் வாங்க மூன்று இந்தியர்களும் சேர்ந்து ஒரேயொரு டிக்கெட் மட்டுமே வாங்கினார்கள். பாகிஸ்தானியர்களுக்கு ஆச்சரியம். அது எப்படி மூன்று பேரும் ஒரே டிக்கெட்ல பயணம் செய்ய முடியும் என்று கேட்டார் அந்த பாகிஸ்தானியர்களில் ஒருவர். நடக்கறதை வேடிக்கை பார்த்து நீயும் கத்துக்கோ என்று பதில் வந்தது இந்தியரிடமிருந்து.

எல்லோரும் ரயில் ஏறினார்கள் பாகிஸ்தானியர்கள் தங்களுக்கான இருக்கைகளுக்குச் சென்று அமர அந்த மூன்று இந்தியர்களும் ஒரு டாய்டலெட்டுக்குள் ஐக்கியிமானார்கள். ரயில் புறப்பட்ட சற்று நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்தார். இருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு கடைசியாக மூடப்பட்டிருந்த

அந்த டாய்லெட் பக்கம் வந்தார். கதவைத் தட்டிவிட்டு டிக்கெட் ப்ளீஸ் என்றார். கதவு லேசாக திறந்து. உள்ளேயிருந்து ஒரு கை மட்டும் டிக்கெட்டை நீட்ட அதை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார் பரிசோதகர். அடடா.. .. .. இந்தியர்கள் ரொம்ப புத்திசாலிங்கப்பா என்று வியந்த பாகிஸ்தானியர்கள் ஊருக்கு திரும்பி வரும்போது இந்த ஐடியாவைத் தாங்களும் செயல்படுத்தியே தீருவது என்று முடிவு செய்தார்கள்.

கிரிக்கெட் போட்டி முடிந்து ஊருக்குத் திரும்ப ரயில்வே ஸ்டெசன் வந்த பாகிஸ்தானியர்கள் திட்டமிட்டிருந்த ஒரேயோரு டிக்கெட் மட்டும் வாங்கினார்கள். என்ன ஆச்சரியம் .. .. .. அந்த மூன்று இந்தியர்களும் இந்த முறை ஒரு டிக்கெட் கூட வாங்கவில்லை ஒரு டிக்கெட் கூட இல்லாம எப்படிப்பா சமாளிக்கப் போறீங் என்று இவர்கள் கேட்டதற்கு நடக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு கத்துக்கோங் என்று அந்த பெரிய பதிலே வந்தது.

ரயிலில் ஏறிய மூன்று பாகிஸ்தானியர்களும் நேராக டாய்லெட்டுக்குள் சென்று ஐக்கியமானதும் ஒருவர் பின் ஒருவராக ரயிலில் ஏறினார்கள் இந்தியர்கள். ரயில் புறப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பாத்ரூமுக்குள் இரண்டு இந்தியர்கள் உள்ளே போக .. .. .. மூன்றாவது நபர் மட்டும் அந்த பாகிஸ்தானியர்கள் இருந்த டாய்லெட் பக்கம் போனார். கதவைத் தட்டி 'டிக்கெட் ப்ளீஸ் ' என்றார் டிக்கெட் பரிசோதகரின் தோரணையில்.

##############################################

அந்த டாக்டர் சரியான கிரிக்கெட் பைத்தியம்

ஏன் ,

ஆபரேசன் தியேட்டர் வெளியே சிவப்பு லைட் பச்சை லைட் வைத்து பேசண்ட் அவுட்ன்னா சிவப்பு லைட்டை போடறார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சரியான மக்கு சார் அந்த ஆள் கிரிக்கெட் பார்க்க இரண்டு டிக்கெட் எவனோ வித்திருக்கான் .. ..இவரும் வாங்கியிருக்காரு ..

அதுல என்ன தப்பு .. .. ,

அட் டிவி-ல மேட்ச் பார்க்கிறதுக்கான டிக்கெட்டை வாங்கியிருக்கார் சார் .. .

$$$$$$$$$$$$$

அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே .. .. ,

விதி விளையாடிருச்சினு சொன்னா ஸ்கோர் என்னனு கேட்கறார் .. ..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அகிலும் நிகிலும் நண்பர்கள். ஒரு நாள் அகில் ரொம்பக் கவலையா இருந்தான்.

என்ன விசயம் .. .. ,னு கேட்டான் நிகில் .

ஒரு பந்தயத்துல ஆயிரம் ரூபாய் தோத்துட்டேன்னான் அகில்

என்ன பந்தயம் .. ..,

இந்தியா செளத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் மெட்ச்சில் இந்தியா ஜெயிக்கும்னு ஐந்நூறு ரூபா பந்தயம் கட்டினேன். தோத்துட்டேன்.

சரி அது ஐந்நூறு ரூபாதானெ மீதி ஐந்நூறு ரூபா எங்க போச்சு.. ,

நான் ஹை லைட்டுக்கும் பந்தயம் கட்டினேன்.

*********************************************

நம்ம இந்திய கிரிக்கெட் டீமுக்கு ரொம்ப பிடிச்ச கொசுவர்த்தி எதுன்னு சொல்லு பார்ப்போம்

தெரியலையே

ஆல் அவுட்

((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

ரேடியோவில் கிரிக்கெட் ரன்னிங் காமெண்டரி சொல்லிக் கொண்டிருந்தார்கள் .. சச்சின் 100 அடித்து சிறப்பாக ஆடிக்

கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த போதையில் இருந்த ஒருவர் சொன்னார்.

நான் 500 அடிச்சிட்டு ஆடாம ஸ்டெடியா இருக்கேன் சச்சின் 100 அடிச்சிட்டு ஆடறான் பாரு .. ..

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

எட்டுக்கால் பூச்சியும் ஆயிரங்கால் பூச்சியும் கிரிக்கெட் விளையாடப் போச்சாம். எட்டுக்கால் பூச்சி மட்டும் சரியான டயத்துக்கு கிரவுண்டுக்கு வந்துடுச்சாம் ஆனா ஆயிரங்கால் பூச்சி வர லேட்டாயிடுச்சு ஏன் சொல்லு .. ,

தெரியலையே

ஆயிரங்கால் பூச்சிக்கு ஷூ, கால் பேட் மாட்டவே நேரம் ஆயிடாதா .. .. ,

@#############$&&&&$$$$$$$$$$$$$$#%@^%&&*@#

எனக்கு வந்ததும் சரியில்லை வாச்சதும் சரியில்ல

ஏன் புலம்பற

என் புருசன் என்னனா குதிரை ரேஸ்ல தோத்துட்டு வர்றாரு என் பையன் கிரிக்கெட் பெட்டிங்ல தோத்துட்டு வர்றான்.

=====================================

மரணப் படுக்கையில் இருந்த என் தாத்தா முன்னாள் கிரிக்கெட் பிளேயர்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்,

பணத்தைக் கொடுத்ததும் அவுட் ஆயிட்டாரே


தமிழ்மணக் கிரிக்கெட் போட்டி


Friday, March 14, 2008

ஆஸ்திரேலியாவுக்கு சரிவு ஆரம்பம் - ODI தரவரிசையில் முதலிடத்தைப் பறி கொடுத்தது.

கடந்த 3 உலகக் கோப்பை போட்டிகளையும் வென்று ஒருநாள் ஆட்டத் தரவரிசையில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு இப்போது கடுமையான சோதனைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று நடைபெற்ற பங்களாதேஷ்க்கு எதிரான மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி ICC தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் நியூஸிலாந்துக்கு அடுத்து நான்காவதாக இந்தியா உள்ளது.






































வெற்றிக் களிப்பில் ஸ்மித்

Thursday, March 13, 2008

ICC சேம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் - இந்தி., பாக்., ஆஸி ஒரே அணியில்

வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் ICC சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. அதில் பட்டியலில் முதலில் உள்ள 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இதன்படி மார்ச் 12 தரவரிசை அடிப்படையில் இரண்டு குழுவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


இதில் ஒரு குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், மற்றொரு குழுவில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப் படும்.


படம் 1 : 2004 கோப்பை வெற்றியாளர் - வெஸ்ட் இண்டீஸ்
படம் 2 : 1998 கோப்பை வெற்றியாளர் - தென் ஆப்பிரிக்கா

Wednesday, March 12, 2008

பிரம்ம ரசத்தை ஓட விடலாம்! வாருங்கள்

நாங்களும் பிரம்ம ரசத்தை ஓட விடுறோம்! பாருங்கள்.
வவாசங்கத்தின் ஆண்டு விழா போட்டிக்கு இந்த படங்கள்

படத்தின் மீது கிளிக் செய்து பார்க்கவும்





உங்கள் பெயரில் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்மண கிரிக்கெட் போட்டி விரைவில் அறிவிப்பு வரும்....

Tuesday, March 11, 2008

IPL கிரிக்கெட் - இரண்டாம் ஏலம்

IPL கிரிக்கெட்டுக்கான அடுத்த வீரர்களுக்கான ஏலம் இன்று மும்பையில் நடந்தது. இதில் சில வெளிநாட்டு வீரர்களும், சில இந்திய வீரர்களும் ஏலம் விடப்பட்டனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களும் இதில் பங்கேற்றனர். ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள் விபரம்..

பெங்களூரு
மிஸ்பா-உல்-ஹக்
அப்துர் ரசாக் (பங்களாதேஷ்)
டெய்லர் (நியூஸி)
விராத் கொகில் (U19 இந்திய அணி கேப்டன்)
ஸ்ரீவத்ச் கோஷ்வாமி ( U19 இந்திய அணி)

ஜெய்ப்பூர்
மாஸ்கெரன்காஸ் (இங்கி)
மோர்க்கல் (தெ.ஆ)
வாட்சன் (ஆஸி)
தன்வீர் (பாக்)
கோக்லி மற்றும் ரவீந்திர ஜடேஜா (U19 இந்திய அணி)

கொல்கத்தா
சல்மான் பட் மற்றும் ஹபீஸ் (பாக்)
சித்தார்த் கெளல் மற்றும் இக்பால் அப்துல்லா (U19 இந்திய அணி)

மொகாலி
ஹோப்ஸ் மற்றும் போமர்பாச் (ஆஸி)
மில்ஸ் (நியூஸி)
ஸ்ரீவஸ்தவா மற்றும் அர்கல் (U19 இந்திய அணி)

டெல்லி
பிரதீப் சங்கவான் (U19 இந்திய அணி)
பிரட் ஜீவ்ஸ் (தாஸ்மேனியா) மேல் விபரம்

மும்பை
பிரின்ஸ் (தெ.ஆ)
திவாரி மற்றும் மனீஷ் பாண்டே (U19 இந்திய அணி)

சென்னை
நெப்போலியன் ஐன்ஸ்டீன் (U19 இந்திய அணி)
அபினவ் முகிந்த் (U19 இந்திய அணி)
விராஜ் காத்பே (U19 இந்திய அணி)

Monday, March 10, 2008

IPL கிரிக்கெட் - இரண்டாம்கட்ட ஏலம் மார்ச் 11 ந்தேதி




















வரும் ஏப்ரல் 18ல் தொடங்க இருக்கும் IPL கிரிக்கெட் தொடரின் விளையாடும் வீரர்களுக்கான முதல் ஏலம் சமீபத்தில் நடந்தது. அடுத்த கட்ட ஏலம் நாளை (மார்ச் 11) நடைபெற உள்ளது. 18 வீரர்களுக்கான ஏலமாக இது இருக்கும். இதில் முக்கியமானவர்கள் மிஸ்பா-உல்-ஹக், வாட்சன், அஷ்ரபுல்,முர்தாசா, ஹாக், யூஸூப், ஹபீஸ். அனைத்து அணிகளும் வரும் 18 ந்தேதிக்குள் தமது அணியின் முழு பட்டியலையும் தர வேண்டும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.


உங்கள் பெயரில் எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். விரைவில் எப்படி பங்கேற்பது என்ற விபரங்கள் வெளியாகும்.
தமிழ்மண கிரிக்கெட் போட்டி

Thursday, March 6, 2008

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் - அட்டவணை



ஏப்ரல் மாதம்
Fri 18 பெங்களூரு v கொல்கத்தா
Sat 19 மொகாலி v சென்னை
Sat 19 டெல்லி v ஜெய்ப்பூர்
Sun 20 மும்பை v பெங்களூரு
Sun 20 கொல்கத்தா v ஹைதராபாத்
Mon 21 ஜெய்ப்பூர் vமொகாலி
Tue 22 ஹைதராபாத் vடெல்லி
Wed 23 சென்னை v மும்பை
Thu 24 ஹைதராபாத் v ஜெய்ப்பூர்
Fri 25 மொகாலி v மும்பை
Sat 26 பெங்களூரு v ஜெய்ப்பூர்
Sat 26 சென்னை v கொல்கத்தா
Sun 27 மும்பை v ஹைதராபாத்
Sun 27 மொகாலி vடெல்லி
Mon 28 பெங்களூரு v சென்னை
Tue 29 கொல்கத்தா v மும்பை
Wed 30 டெல்லி v பெங்களூரு



மே மாதம்
Thu 1 ஹைதராபாத் vமொகாலி
Thu 1 ஜெய்ப்பூர் v கொல்கத்தா
Fri 2 சென்னை vடெல்லி
Sat 3 ஹைதராபாத் v பெங்களூரு
Sat 3 மொகாலி v கொல்கத்தா
Sun 4 மும்பை vடெல்லி
Sun 4 ஜெய்ப்பூர் v சென்னை
Mon 5 பெங்களூரு vமொகாலி
Tue 6 சென்னை v ஹைதராபாத்
Wed 7 மும்பை v ஜெய்ப்பூர்
Thu 8 டெல்லி v சென்னை
Thu 8 கொல்கத்தா v பெங்களூரு
Fri 9 ஜெய்ப்பூர் v ஹைதராபாத்
Sat 10 பெங்களூரு v மும்பை
Sat 10 சென்னை vமொகாலி
Sun 11 ஹைதராபாத் v கொல்கத்தா
Sun 11 ஜெய்ப்பூர் vடெல்லி
Mon 12 மொகாலி v பெங்களூரு
Tue 13 கொல்கத்தா vடெல்லி
Wed 14 மும்பை v சென்னை
Wed 14 மொகாலி v ஜெய்ப்பூர்
Thu 15 டெல்லி v ஹைதராபாத்
Fri 16 மும்பை v கொல்கத்தா
Sat 17 டெல்லி vமொகாலி
Sat 17 ஜெய்ப்பூர் v பெங்களூரு
Sun 18 ஹைதராபாத் v மும்பை
Sun 18 கொல்கத்தா v சென்னை
Mon 19 பெங்களூரு vடெல்லி
Tue 20 கொல்கத்தா v ஜெய்ப்பூர்
Wed 21 மும்பை vமொகாலி
Wed 21 சென்னை v பெங்களூரு
Thu 22 டெல்லி v கொல்கத்தா
Fri 23 மொகாலி v ஹைதராபாத்
Sat 24 டெல்லி v மும்பை
Sat 24 சென்னை v ஜெய்ப்பூர்
Sun 25 பெங்களூரு v ஹைதராபாத்
Sun 25 கொல்கத்தா vமொகாலி
Mon 26 ஜெய்ப்பூர் v மும்பை
Tue 27 ஹைதராபாத் v சென்னை


Fri 30 முதல் அரை இறுதி
Sat 31 இரண்டாம் அரை இறுதி



சூன் மாதம்
Sun 1 இறுதிப் போட்டி

தமிழ்மண கிரிக்கெட் போட்டி - அறிவிப்பு

இந்தியன் பிரிமியர் லீக் ஆட்டங்கள் இந்தியாவில் மிக விரைவில் துவங்க உள்ளன. எட்டு அணிகளையும் பல பிரமுகர்கள் விலைக்கு வாங்கி விட்டனர். அந்தந்த அணிக்கான வீரர்களும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டனர். நமக்கெல்லாம் கொஞ்சம் ஆதங்கமாக இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் அதே போல் ஒரு அணியை சுலபமாக வாங்கி அதை விளையாட விடுவது தான் இந்த கிரிக்கெட் போட்டியின் நோக்கம். இந்த பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டவுடன் அதற்காக அறிவுப்புகள் வெளியிடப்படும்.

பரிசுத்தொகை விபரம்

முதல் பரிசு : 2500 இந்திய ரூபாய்கள்
இரண்டாம் பரிசு : 1500 இந்திய ரூபாய்கள்
மூன்றாம் பரிசு : 1000 இந்திய ரூபாய்கள்


ஆக மொத்தம் 5000 ரூபாய்கள்
பரிசுத்தொகை உங்களது பெயரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அனைவராலும் கை விடப்பட்ட குழந்தைகள் உள்ள ஒரு காப்பகத்திற்கு அளிக்கப்படும். அதன் ரசீது நீங்கள் கூறும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த இல்லம் பற்றிய ஒரு பதிவு

கிரிக்கெட்

கிரிக்கெட்டுக்கான ஒரு வலைப்பதிவு